Published on 20/03/2019 | Edited on 20/03/2019
திடீரன குடியை நிறுத்தினால் நரம்பு தளர்ச்சி ஏற்படும் என்பதால் மதுவிலக்கை உடனே அமல் படுத்த முடியாது என அதிமுக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

ராஜபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,
குடிப்பவர்களின் உயிரை காப்பாற்றும் பொருட்டு படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும். உடனே குடியை நிறுத்தினால் நரம்பு தளர்ச்சி ஏற்படும். ராஜகண்ணப்பன் விலகி சென்றதால் அதிமுகவுக்கு ஒரு ஓட்டுதான் இழப்பு ஏற்பட்டுள்ளது எனக்கூறினார்.