Skip to main content

ஆளும் தகுதி அ.தி.மு.க. - தி.மு.க.வுக்கு மட்டுமே உள்ளது: ரஜினி, கமல் காணாமல் போய்விடுவார்கள்: முன்னாள் அமைச்சர் பேச்சு

Published on 25/06/2018 | Edited on 25/06/2018
raja kannappan- rajini - kamal


பரமக்குடியில் அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் அமைப்பு செயலாளருமான ராஜகண்ணப்பன் கலந்து கொண்டார்.
 

அப்போது அவர்,
 

தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சியாகவும், அதிக வாக்கு வங்கி கொண்ட கட்சியாகவும் விளங்குவது அ.தி.மு.க. தான். தமிழ்நாட்டை ஆளும் தகுதி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் மட்டும் தான் உண்டு. காரணம் அரசியலில் கட்டமைப்பு, 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி உள்ள கட்சிகளாகும்.

 

 

 

மற்ற கட்சிகளுக்கு எல்லாம் இது கிடையாது. தற்போது உருவாகும் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் அரசியலில் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவார்கள். அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் எப்போதும் கூட்டணி வைக்காது. ஸ்டெர்லைட் உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தி.மு.க. தான் காரணம்.

 

 

 

ஜெயலலிதா ஆட்சி காலத்தை போலவே இப்போதும் சட்டம் –ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. தினகரன் ஆரம்பித்துள்ள அ.ம.மு.க. எங்கு உள்ளது என்றே தெரியவில்லை. இவ்வாறு பேசினார்.

 

சார்ந்த செய்திகள்