Skip to main content

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை

Published on 16/07/2023 | Edited on 16/07/2023

 

 Rain in 10 districts in next 3 hours

 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மிதமான மழை பொழிந்து வரும் நிலையில் இன்னும் அடுத்த மூன்று மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தின் நீலகிரி, கோவை, சேலம், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும். அதேபோல் ராமநாதபுரம், தூத்துக்குடியில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்