Skip to main content

துப்பாக்கி குண்டை அகற்றிய அரசு மருத்துவர்கள்

Published on 14/05/2019 | Edited on 14/05/2019


 
    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுக்கா, திருக்கட்டளையை சேர்ந்த ராஜேந்திரன் (40)  தனது நண்பருடன் ஏற்பட்ட பிரச்சனையில் ஒற்றைகுழல் துப்பாக்கியால் 11 ம் தேதி மாலை 4  மணிக்கு சுடப்பட்டார். இதில், ராசேந்திரனின் இடது காலில்  குண்டு பாய்ந்து  தசையை ஊடுருவி கால் எலும்பிற்கு பக்கத்தில் இருந்தது.

 

m


 எக்ஸ்ரே மூலம் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் துப்பாக்கி குண்டை அகற்ற முயற்சித்தனர். அது ஆழமாக பதிந்துள்ள நிலையில் அகற்றுவது சிக்கலாக இருந்ததால் எம்.ஆர்.ஐ. அதிநவீன கருவி மூலம் துப்பாக்கி குண்டு இருந்த இடத்தை கண்டறிந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் காலில் பாய்ந்த இரு குண்டுகளை அகற்றினர்.  


    இதுபற்றி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் அழ.மீனாட்சிசுந்தரம் கூறும் போது..  11 - ம் தேதி மாலை சுடப்பட்ட ராஜேந்திரன் 12 ம் தேதி நள்ளிரவு 12  மணிக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அனுமதிக்கப்பட்ட ஐந்தரை  மணிநேரத்தில் அவருக்கு தேவையான உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு துப்பாக்கிக் குண்டுகள் அகற்றப்பட்டன.


    துப்பாக்கிக் குண்டுகள் உடல் திசுக்களின் வழியே நகர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் அதை அகற்றுவது சவாலானது. எம்.ஆர்.ஐ. என்னும் அதிநவீன கருவி மூலம் உடனுக்குடன் எக்ஸ்ரே எடுப்பது போல் கண்காணிக்க முடியும். துப்பாக்கி குண்டு போன்ற உலோக பொருட்கள் நகர்வதையும் இக்கருவி மூலம் கண்டறியலாம். எலும்புகளை இணைப்பதற்கு பயன்படுத்தப்படும் இக்கருவிமூலம் துப்பாக்கிக் குண்டு இயக்கத்தை கண்டறிந்த எலும்பு மருத்துவர்கள் ராஜ்மோகன், சங்கர் மற்றும் மயக்க மருத்துவர் ரவிக்குமார் ஆகியோர் அகற்றியது பாராட்டத்தக்கது என்றார். 


    துப்பாக்கியால் சுட்ட நபரை வல்லத்திராகோட்டை போலிசார் கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
            

சார்ந்த செய்திகள்

Next Story

மருந்தகங்களுக்கு சென்னை ஆட்சியர் அதிரடி உத்தரவு!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Chennai Collector action order for pharmacies

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் இன்று முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் - 1940 மற்றும் - 1945 அட்டவணை எக்ஸ் (X), எச் (H), எச்1 (H1) மற்றும் டிரக்ஸ் (Drugs) எனக் குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்துக் கடைகளிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் - 1973 பிரிவு 133இன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றைய (05.03.2024) நாளில் இருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

இந்த உத்தரவை அமல்படுத்த தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வின்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது  உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து! - கவனம் கொடுக்குமா அரசு?

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Will the government pay attention? children's lives!

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சாலையில் உள்ளது முத்துப்பட்டினம் என்கிற சின்னக் கிராமம். இங்குள்ள குழந்தைகள் வெகுதூரம் சென்று தொடக்கக் கல்வி கற்க வேண்டும் என்பதால் அதே ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஒரு வகுப்பறை கட்டடம் உள்ளது. இதில் 2 வகுப்பறைக் கட்டடத்தின் மேற்கூரை காங்கிரீட், சிமெண்ட் பூச்சுகள் கடந்த சில வருடங்களாகவே உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளை அந்த வகுப்பறைகளில் வைக்க அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

உள்பக்கத்தின் மேல் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து கொட்டி துருப்பிடித்த கம்பிகளும் தொங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் இருக்கும் போது கொட்டாமல் இரவில் கொட்டுவதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதுவரை பாதிப்பு இல்லை. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு வேறு கட்டடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து வைக்கும் கோரிக்கை ஏனோ அதிகாரிகள் கவனம் பெறவில்லை. 

அதிகாரிகளின் அலட்சியத்தால் தினம் தினம் திக் திக் மனநிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். தலைக்கு மேலே ஆபத்து இருக்கும் போது எப்படி நிம்மதியாக படிக்க முடியும் மாணவர்களால். கவனம் எல்லாம் இடிந்து கொட்டும் மேற்கூரை மேலே தானே இருக்கும். பெற்றோர்களும் கூட கூலி வேலைக்குச் சென்ற இடத்திலும் பள்ளியில் தங்கள் குழந்தைகளின் நிலை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ அரசுப் பள்ளிகளை அரசு நிதியை எதிர்பார்க்காமல் அந்தந்த ஊர் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் சொந்தச் செலவில் மாணவர்களின் நலனுக்காக கட்டடம், திறன் வகுப்பறைகள் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களின் உயிர் காக்க அரசோ அல்லது தன்னார்வலர்களோ உடனே ஒரு இரண்டு வகுப்பறைக் கட்டடம் கட்டிக் கொடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் அந்த கிராம மக்கள்.