Skip to main content

அரசாங்க பிராந்தி கடைகளை தனியாருக்கு ஏலம் விட புதுச்சேரி அரசு முடிவு!

Published on 14/01/2019 | Edited on 14/01/2019
na

புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர்கள், அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 
கூட்டத்திற்கு பின் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“ அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளேட் ,கப் என 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களும் மார்ச் 01-ஆம் தேதி முதல்  தடை செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.  அவற்றிற்கான மாற்று பொருட்கள் பயன்பாட்டுக்கு விடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. எனவே மார்ச் 01-க்குள் மாற்று ஏற்பாடுகளை வணிகர்கள் செய்து கொள்ள வேண்டும்.  

 
மேலும் அரசு சார்பு நிறுவனமான பாசிக் பாப்ஸ்கோ பிராந்தி கடைகளை தனியாருக்கு ஏலத்தில் விடலாம் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இருளர் மலைவாழ் மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைபடுத்தப்படும்.                                                                                              இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

 

இதனிடையே  நேற்று சனிக்கிழமை நாராயணசாமி அளித்த பேட்டியில்  

 மாநில மக்களின் உரிமைகளை தடுக்க கிரண்பேடி நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும், புதுச்சேரி மக்கள் பொங்கியெழுந்தால் கிரண்பேடி இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி கூறியதற்கு கிரண்பேடி சவால் விடுத்துள்ளார். ‘என்னை பயமுறுத்தும் செயலில் முதலமைச்சர் நாராயணசாமி ஈடுபட வேண்டாம்’ என கிரண்பேடி சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி பிறந்தநாள் வேலையின்மை தினம்” - புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ்  

Published on 17/09/2023 | Edited on 17/09/2023

 

“Prime Minister Modi Birthday Unemployment Day” - Puducherry Youth Congress

 

பிரதமர் மோடி பிறந்தநாளை வேலையின்மை தினமாக கடைப்பிடித்து புதுச்சேரி இளைஞர் காங்கிரஸார் நூதன கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

 

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று (செப்.17ம் தேதி) பாஜகவினரால் கொண்டாடப்பட்டது. இவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் தங்களது வாழ்த்தை தெரிவித்தனர். 

 

இந்நிலையில், புதுச்சேரி இந்திரா காந்தி சிலை முன்பு திரண்ட புதுச்சேரி இளைஞர் காங்கிரஸார், கோஷங்களை எழுப்பினர். மேலும், டீ, பக்கோடா, சமோசா ஆகியவற்றை விற்று தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். 

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “பா.ஜ.க. அரசு ஜி20 மாநாட்டுக்கு ரூ. 4000 கோடி, புதிய நாடாளுமன்ற கட்ட ரூ. 20,000 கோடி என செலவு செய்துவிட்டு, நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்காமல்; தனது நண்பர் அதானிக்கு சலுகை வழங்குகிறது” என்று பேசினார். 

 

 

Next Story

73 பவுன் நகையை திருடி மோசடி செய்த கூட்டுறவுச் சங்க பொறுப்பாளர்

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

Cooperative society manager who stole 73 pounds of jewelry and cheated

 

புதுச்சேரி கொம்பாக்கத்தில் உள்ளது தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம். இந்தச் சங்கத்தில் கொம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பலர் தங்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். 

 

இதனிடையே கூட்டுறவு கடன் சங்கத்தில் வருடாந்திர தணிக்கை முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனவும், முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து சங்க தலைவர் எம்பெருமாள் கடந்த 16ஆம் தேதி தணிக்கையாளர் இந்திரமோகனுடன் சங்க நிர்வாக பொறுப்பாளரும், முதுநிலை எழுத்தருமான பாப்பான்சாவடியை சேர்ந்த கதிரவன்(48) என்பவரிடம் சங்க கணக்கு வழக்குகளை தணிக்கை செய்யக் கூறினர்.

 

இதற்கு கதிரவன் சரியான பதில் அளிக்காததுடன் மறுநாள் 17ஆம் தேதி பணிக்கு வராமல் விடுப்பு எடுத்துக் கொண்டார். இதனால் சந்தேகமடைந்த எம்பெருமாள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரை சந்தித்து சங்க கணக்குகளை ஆய்வு செய்ய வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து துணைப் பதிவாளர் தலைமையில் தணிக்கையாளர்கள் இந்திராமோகன், குப்புராமன், சிவசங்கர், திருநாவுக்கரசு, சந்தோஷ் குமார் அடங்கிய குழுவினர் சங்க பொறுப்பாளர் கதிரவனை சந்தித்து ஆய்வுக்கு அழைத்தனர். ஆனால் கதிரவன் ஆய்வுக்கு வர மறுத்து, நகை பாதுகாப்பு பெட்டகத்தின் சாவியை மட்டும் கொடுத்து அனுப்பினார்.

 

துணைப் பதிவாளர் முன்னிலையில் நகை பெட்டகம் திறந்து தணிக்கை செய்யப்பட்டது. அப்போது நகை கடன் கணக்குகளில் 198 கணக்குகள் மட்டுமே இருந்தன. அதிலும் 18 நகை கணக்கில் நகைகள் இல்லாமல் வெறும் பைகள் மட்டுமே இருந்தன. அவற்றில் இருந்த ரூபாய் 33 லட்சம் மதிப்புள்ள 588.50 கிராம் தங்க நகைகள் மாயமாகி இருந்தன. இதுகுறித்து சங்க நிர்வாக பொறுப்பாளர் கதிரவன் மீது சங்க தலைவர் எம்பெருமாள் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

போலீசார் மோசடி பிரிவில் வழக்கு பதிவு செய்து கதிரவனிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் கதிரவன் கடந்த பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். கொரோனா காலக்கட்டத்தில் ஏலச்சீட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் கூட்டுறவு சங்கத்தில் வைக்கப்பட்ட நகையை எடுத்து வேறு இடங்களில் அடமானம் வைத்து செலவு செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து கதிரவனை கைது செய்த போலீசார் நகைகளை அடமானம் வைக்க கதிரவனுக்கு உதவியவர்களை தேடி வருகின்றனர்.