Skip to main content

வெளியூர் சென்றதால் உயிர் தப்பிய காதல் ஜோடி... வெறிச்செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த காவல்துறையினர்!

Published on 09/11/2021 | Edited on 09/11/2021

 

The police who arrested those involved in the hysteria

 

தென்காசி மாவட்டத்தின் சுரண்டை நகரம் அருகேயுள்ள சிவகுருநாதபுரத்தின் பாறையடித் தெருவைச் சேர்ந்தவர் விவேக்குமார் (27). இவருடைய தந்தையான ராதாகிருஷ்ணன் காலமானதால் அவர் நடத்திவந்த காய்கறிக் கடையை தொடர்ந்து நடத்திவருகிறார். எனினும், விவேக்குமாரின் குடும்பத்தினர் ஓரளவு வசதி வாய்ப்பு கொண்டவர்கள்.

 

விவேக்குமாரும் சுரண்டையைச் சார்ந்த பெரியமாரிதுரையின் மகள் அன்னலட்சுமி (26) இருவரும் பள்ளிப்படிப்பு முதல், ஒன்பது ஆண்டுகளாகவே தொடர்ந்து காதலித்து வந்திருக்கின்றனர். இருவருக்குள்ளேயும் ஆழமான காதல். இருவரும் வெவ்வேறு பிரிவைச் சார்ந்தவர்கள் என்றாலும், இவர்களது காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதையடுத்து காதலர்கள் நேற்று முன்தினம் சுரண்டை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து பாதுகாப்பு கேட்டுள்ளனர். இரு வீட்டாரையும் காவல்நிலையம் வரவழைத்த போலீசார், அவர்கள் இருவரும் திருமண வயது வந்த மேஜரானவர்கள். அதனால் எந்தவிதமான பிரச்சினையும் கூடாது என அறிவுறுத்தி எழுதி வாங்கியுள்ளனராம்.

 

The police who arrested those involved in the hysteria

 

இதன்பின் நேற்றிரவு திருமணம் செய்து கொண்ட காதலர்கள் உடனடியாக பாதுகாப்பின் பொருட்டு வெளியூர் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. ஆனால் காதல் திருமண ஜோடி வீட்டில் இருப்பதாகக் கருதிய மர்ம நபர்கள் சிலர், நேற்று நள்ளிரவு விவேக்குமாரின் வீட்டில் அவர்களைத் தீர்த்துக் கட்டும் வகையில் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதனால் வீட்டிலிருந்த மின் மோட்டார் பம்ப் செட் மற்றும் பிளாஸ்டிக் குடங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இதுகுறித்து விவேக்குமாரின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தியுள்ளனர்.

 

வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய சுரண்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான டீம், கழுநீர்குளத்தின் மதன்குமார், அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், சென்னையைச் சேர்ந்த சோமசுந்தரம் மகன் கார்த்திக் மூவரையும் கைது செய்து மேல் விசாரணை நடத்திவருகின்றனர். காதல் திருமணத்திற்கு எதிரான ஆணவப் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் சுரண்டைப் பகுதியைப் பரபரப்பாக்கியிருக்கிறது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.