Skip to main content

திடீர் பள்ளம்; வாகன ஓட்டிகள் அவதி

Published on 01/06/2024 | Edited on 01/06/2024
pit; Motorists suffer

கோடம்பாக்கத்தில் சாலை நடுவே திடீரென ஏற்பட்ட பள்ளம் பரபரப்பபை ஏற்படுத்திய நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் அருகே திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இன்று அதிகாலை திடீரென ஒன்பது அடி நீளத்திற்கு இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் சாலை தடுப்புகளை வைத்து வாகனங்களை திருப்பிவிடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவு நேரங்களில் ராட்சத இயந்திரங்களைக் கொண்டு மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இயந்திரத்தின் அதிர்வு காரணமாக இந்த பள்ளன்  ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களுக்கு பரபரப்பை கொடுத்துள்ளது.

சார்ந்த செய்திகள்