Skip to main content

பொங்கல் பரிசு வாங்கச் சென்றவர் காயங்களுடன் சடலமாக மீட்பு..!

Published on 11/01/2021 | Edited on 11/01/2021

 

The person who went to buy Pongal gift money ... The body was recovered with stab wounds ..!


வேலூர், தோட்டப்பாளையம் மாதாகோயில் தெருவைச் சேர்ந்தவர் 50 வயதான வேலு. கடந்த 4ஆம் தேதி நியாயவிலைக்கடையில் பொங்கல் பணம் 2,500 ரூபாய் தருவதை வாங்கி வருவதாக தனது குடும்பத்தாரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். அப்படிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து குடும்பத்தார் புகார் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில், ஜனவரி 11ஆம் தேதி காலை வேலூர், பாலாற்றங்கரை சுடுகாட்டில் ஒரு ஆண் சடலம் கத்தி குத்துக் காயங்களுடன், முகம் சிதைந்த நிலையில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூர் வடக்கு காவல்நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைப் பார்த்துள்ளனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் வேலூர் தாசில்தார் ரமேஷ் முன்னிலையில் அங்கேயே அரசு மருத்துவர்கள் உடல் கூறாய்வு செய்து, உடல் பாகங்கள் சிலவற்றை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.


கட்டிட மேஸ்திரியான வேலுவை யார் கொலை செய்தது? எதற்காக கொலை செய்தார்கள்? எத்தனை பேர் கொலை செய்தார்கள்? எனப் பல்வேறு கேள்விகளுடன் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து இளைஞர் பலி!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
youth passed away after falling into a ditch dug to build a bridge on the road

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சேத்துவண்டை முதல் நெல்லூர் பேட்டை வரை புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே குடியாத்தம் சித்தூர் சாலையில் சித்தூர் கேட் அருகே பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நேற்று இரவு சேத்துவண்டை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அர்ஜுன்(30) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

இதனையடுத்த அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் குடியாத்தம் டூ சித்தூர் சாலையில் தினமும் ஏராளமான கனரகம் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்லும் முக்கிய சாலையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் பாலம் அமைக்கும் பணி நடைபெற்றதால் இந்த அசம்பாவிதம் நடந்ததாகக் கூறி உயிரிழந்த அர்ஜுன் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் சித்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர், இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். விபத்துகள் ஏற்படாவதவாறு ஒப்பந்த நிறுவனம் உரிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனப் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் அதிகாரிகள் சரியென்ற பின்பு சாலை மறியல் கைவிடப்பட்டது.

Next Story

‘கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ - வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Vellore Collector warns that action will be taken against sale of illicit liquor

வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் கள்ள சந்தையில் மது விற்பனை தொடர்பாக நேற்று நடத்தப்பட்ட சோதனையில் 57 பேர் வரை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக மாவட்டம் முழுவதும் மற்றும் அணைக்கட்டு, ஒடுக்கத்தூர், பேர்ணாம்பட்டு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் தீவிர சாராயத் தேடுதல் வேட்டை  நடைபெற்று வருகிறது. இதில் பேரணாம்பட்டு சாத்கர் மலைப்பகுதியில் வேலூர் மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் நேரடியாக களத்தில் இறங்கி சோதனை மேற்கொண்டு தீவிரம் காட்டி வருகிறார்.

மேலும் மலைப்பகுதியில் ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் கள்ளச்சாராய ஊரல்கள் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் பொருட்களை கண்டுபிடித்து  அழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கள்ளச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

அப்போது பேசிய ஆட்சியர் சுப்புலெட்சுமி, "வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கும்பொருட்டு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. அதன்படி மாவட்டத்திலுள்ள 20 உள்வட்டங்களுக்கு தலா 1 குழு வீதம் 20 குழுக்களும், மாவட்டத்திலுள்ள 5 மலைக் கிராமங்களுக்கு 1 குழு வீதம் 5 குழுக்களும் என மொத்தம் 25 குழுக்கள் அமைக்கப்பட உள்ளது.

மலைக் கிராமங்கள் மற்றும் வனப்பகுதிகளில் வனத்துறையின் சார்பில் சோதனை சாவடிகளில் கண்காணிப்பினை தீவிரப்படுத்த வேண்டும். காவல்துறையின் சார்பில் வனத்துறையினருக்கு சோதனை சாவடிகளுக்கு தேவையான முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். மேலும் வனத்துறையின் சார்பில் வனப்பகுதிகளில் அவ்வப்பொழுது திடீர் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

போதைப் பொருட்களின் விற்பனை கண்டறியப்பட்டால் தொடர்புடைய வணிக நிறுவனம் அல்லது கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்துதுறை அலுவலர்களும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தங்களுக்கான பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும். உத்தரவை பின்பற்றாத அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், "என எச்சரிக்கை விடுத்தார்.