Skip to main content

வீடியோவை காட்டி நான்கு ஆண்டுகளாக பலரை சீரழித்த கொடூரன் கைது..ஈரோட்டில் பரபரப்பு

Published on 28/04/2019 | Edited on 29/04/2019

ஈரோட்டில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷங்கள் செய்து அதை செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு நான்கு ஆண்டுகளாக அவரை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய காம கொடூரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

ஈரோடு காந்தி நகரைச் சேர்ந்த மாணவி ஒருவர் திண்டல் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு பயின்று வந்தார். மாணவி கல்லூரிக்கு வெளியில் அமைந்துள்ள கடைக்கு சென்று வரும்போது வில்லரசம்பட்டி யை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற  ஏற்கனவே திருமணமானவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 

person was arrested for sexually destroying many people for four years

 

மாணவியின் பிறந்தநாளன்று ஏற்காடு செல்லலாம் என அழைத்துச் சென்ற ராதாகிருஷ்ணன் காரில் செல்லும்போது ஆபாசப்படங்களை காட்டியவாறு காரில் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான. சில்மிஷத்தில் ஈடுபட்டதை மற்றொரு செல்போன் கேமராவில் படம் பிடித்துக் கொண்ட ராதாகிருஷ்ணன் அதனை இணையத்தில் பதிவேற்றி விடுவதாக மிரட்டி மாணவியை பாலியல் உறவுக்கு அழைத்துள்ளான்.

 

 

வேறுவழியின்றி அதற்கு சம்மதித்த மாணவியை ஈரோடு பேருந்துநிலையம் முன்பு உள்ள விக்னேஸ்வரா லாட்ஜுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அதனையும் வீடியோவாக பதிவு செய்து கொண்ட ராதாகிருஷ்ணன் அந்த வீடியோவை காண்பித்து மிரட்டி கடந்த 4 ஆண்டுகளாக மாணவியை தொடர்ந்து சீரழித்துள்ளான்.

 

person was arrested for sexualy destroying many people for four years

 

இடையில் முதல் முறை கர்ப்பமடைந்த மாணவிக்கு காரில் வைத்து போலியாக தாலி கட்டி மனைவி என்று கூறி தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த ராதாகிருஷ்ணன் இரண்டாவது முறை கர்ப்பம் ஆன பொழுது கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து கருவை கலைத்துள்ளான்.  மாணவியின் செல்போனில் உள்ள அவரது தோழிகளின் எண்ணை சேகரித்து அவர்களில் பலருக்கும் இதே போன்று பாலியல் இச்சைக்கு மிரட்டியுள்ளான் உட்படுத்தியுள்ளான்.  

 

இந்த கொடுமைகள் குறித்து வெளியில் சொல்ல முடியாத அந்த மாணவியின் செயல்பாடுகளில் மாற்றத்தை கண்ட பெற்றோர் அவரிடம் இது குறித்து கேட்டபோது தனது பெற்றோரிடம் நடந்த உண்மையை மாணவி கூற அவரது பெற்றோர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். 

 

person was arrested for sexually destroying many people for four years

 

இதனையடுத்து ராதாகிருஷ்ணன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீஸார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வசதியான குடும்ப பின்னணியை கொண்ட ராதாகிருஷ்ணன் வேலை வெட்டிக்கும் செல்லாமல் கல்லூரி முன் உள்ள நண்பனின் கடையில் அமர்ந்து கொண்டு ஏராளமானவர்களை பேசி மயக்கி இதேபோல்  100க்கும் மேற்பட்ட பெண்களை கொடுமைக்கு ஆளாக்கி வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

 

அண்மையில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதனை அடுத்து பெரம்பலூரிலும் இதுபோன்ற பாலியல் சம்பவங்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகளும், செய்திகளும் வெளியானது. இந்நிலையில் ஈரோட்டில் அதே போன்று பாலியல் வன்கொடுமை நிகழ்வு கொடூரம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.