Skip to main content

பழ.நெடுமாறனின் புத்தகங்களை அழிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு    

Published on 14/11/2018 | Edited on 14/11/2018
pazha nedumaran


'தமிழ் ஈழம் சிவக்கிறது' என்ற புத்தகத்தை கடந்த 2002ஆம் ஆண்டு வெளியிட்டார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும், பழ.நெடுமாறனிடம் இருந்து புத்தகங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இந்த வழக்கில் இருந்து, 2006ஆம் ஆண்டில் அவர் விடுதலை செய்யப்பட்டார். 
 

தான் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை திரும்பத் தரக் கோரி பழ.நெடுமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பழ.நெடுமாறன் எழுதிய அந்த புத்தகங்களை திரும்ப வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 
 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முரளிதரன், பழ நெடுமாறனின் மனுவை தள்ளுபடி செய்தார். 
 

இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றுள்ள புத்தகங்களை திரும்ப வழங்க மறுத்ததோடு, அந்த புத்தகங்களை சட்ட நடைமுறைகளை பின்பற்றி அழிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்