Skip to main content

நாட்டு மருந்து சாப்பிட்டு உயிரிழந்த சிறுவன்? - பெற்றோர் புகார்

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

Parents complain passed away boy who consumed local medicine

 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் அவரது பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். 

 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள தைலாபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சக்தி. இவரது மகன் 10 வயது ரோகித் தைலாபுரத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக திடீரென சிறுவனின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. பின்னர் மருத்துவ பரிசோதனையில் சிறுவனுக்கு மஞ்சள் காமாலை இருக்கிறது எனத் தெரிய வந்துள்ளது. உடனடியாக சிறுவனின் பெற்றோர் கடந்த 19 ஆம் தேதி விழுப்புரம் அருகே உள்ள கெங்கராம்பாளையத்தைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் காந்திமதி என்பவரிடம் நாட்டு மருந்து வாங்கிக் கொடுத்துள்ளனர்.

 

காலை 8 மணிக்கு நாட்டு மருந்து சாப்பிட்டு விட்டு வீட்டுக்குச் சென்ற சிறுவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவனை புதுச்சேரி கதிர்காமம் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டு சென்று சேர்த்தனர். அன்றிரவு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

 

இதனிடையே, நாட்டு மருந்து சாப்பிட்டதால்தான் சிறுவன் உயிரிழந்திருப்பதாகவும், சாவில் சந்தேகம் இருப்பதாகவும் வளவனூர் காவல் நிலையத்தில் சிறுவனது பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மஞ்சள் காமாலைக்கு நாட்டு வைத்தியம், மூலிகை வைத்தியம் மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும் நிலை உள்ளது. கெங்கராம்பாளையம் பகுதியில் உள்ள நாட்டு மருத்துவரிடம் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டவர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அங்கு சென்று நாட்டு மருந்து சாப்பிட்டு குணமாகி உள்ளனர். மேலும் மஞ்சள் காமாலை நோய் முற்றிய நிலையில் சிகிச்சை எடுத்ததினால் சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் உயிரிழந்திருக்கலாம், நாட்டு மருந்து சாப்பிட்டதால் இருக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.