Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; ஊராட்சி மன்றத் தலைவர் தற்கொலை

Published on 20/06/2023 | Edited on 21/06/2023

 

Panchayat council president lost their life in virudhunagar

 

விருதுநகர் மாவட்டம் - காரியாபட்டி தாலுகா – கிழவனேரி கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்திக் (வயது 31) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

இளம்வயதில், அதுவும் பொறியாளரான கார்த்திக், ஊராட்சி மன்றத் தலைவரானார். அவருடைய மரணம் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்புகின்றன. திருமணமான கார்த்திக், மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தும், காரியாபட்டி அருகே வசிக்கும் சேர்ந்த 29 வயது ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் பழகி வந்துள்ளார். ரம்யாவுக்கும் திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். கார்த்திக்கின் திருமணத்தை மீறிய உறவை அறிந்த அவரது மனைவி கோபித்துக்கொண்டு பிரிந்து விட்டார்.  

 

இந்நிலையில், ரம்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அது தனக்குப் பிறந்த குழந்தை என்பதில் உறுதியாக இருந்த கார்த்திக், தன்னோடு குடும்பம் நடத்துவதற்கு ரம்யாவை கிழவனேரிக்கு வரச்சொல்லி  வற்புறுத்தியிருக்கிறார். ஆனால், கணவர் மற்றும் குழந்தைகளோடு வாழ்க்கை நடத்தும் ரம்யா, கார்த்திக்கின் அழைப்பை ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து, இருவருக்குமிடையே சண்டை நடந்திருக்கிறது. பொதுவாகவே, ரம்யாவின் வீட்டுக்கு வரும்போதெல்லாம் தகராறு நடக்குமாம். அதேரீதியில்தான் அன்றும் ‘நான் சாகப்போகிறேன்..’ என்று மிரட்டலாகச் சொல்லி அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டாராம் கார்த்திக். வெகுநேரமாகியும் கதவைத் திறக்காததால், அவசர போலீஸுக்கும், கார்த்திக்கின் நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்திருக்கிறார் ரம்யா. நண்பர்கள் வந்து கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, சேலையால் தூக்கிட்டு கார்த்திக் தற்கொலை செய்து உயிரை விட்டுள்ளார். காரியாபட்டி அரசு மருத்துவமனையும் கார்த்திக் ஏற்கனவே இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்திருக்கிறது.    

 

கார்த்திக் மரணம் குறித்து கேள்விப்பட்ட கிழவனேரி கிராமத்து மக்களும் உறவினர்களும் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் குவிந்தனர். கார்த்திக் உடலை உடற்கூராய்வுக்காக எடுத்துச்செல்ல முற்பட்டபோது, கார்த்திக் இறப்புக்கு காரணமானவரை கைது செய்யக்கோரி, காரியாபட்டி – கள்ளிக்குடி சாலையில் மறியல் செய்தனர். காரியாபட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர். அதன்பிறகே, கார்த்திக் உடல் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

 

சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ள காரியாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரம்யாவும் காவல்நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார். இது குறித்து விருதுநகர் மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாளும் விசாரணை மேற்கொண்டு வருகிறார். தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் ரம்யாவிடமே கார்த்திக் கொடுத்து வந்ததாகவும், சண்டை நடந்த போது கார்த்திக் வைத்திருந்த சில லட்சங்கள் மாயமானதாகவும், கார்த்திக் உடலில் காணப்பட்ட ரத்தக்காயங்கள் எவ்வாறு ஏற்பட்டது எனவும், பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருவதாக காவல்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.