Skip to main content

தமிழக மக்கள் முன்பாக இருக்கும் ஒரே அரசியல் ஆளுமை நரேந்திர மோடிதான்: எச்.ராஜா பேட்டி

Published on 14/08/2018 | Edited on 14/08/2018
H. Raja


தமிழக மக்கள் முன்பாக இருக்கும் ஒரே அரசியல் ஆளுமை பிரதமர் நரேந்திர மோடிதான் என்று எச்.ராஜா கூறினார்.
 

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குளித்தலை அருகே அய்யர்மலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 
 

 

 

கடந்த 20 மாதங்களுக்கு உள்ளாக இரண்டு மிகப்பெரிய அரசியல் ஆளுமைகளான ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவரும் காலமாகிவிட்டனர். தமிழக மக்கள் முன்பாக இருக்கும் ஒரே அரசியல் ஆளுமை பிரதமர் நரேந்திர மோடிதான். இதன் தாக்கம் வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும். தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை பா.ஜ.க. ஏற்படுத்தும். 
 

 

 

தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து பா.ஜ.க. அகில இந்திய தலைமை அக்டோபரில் அறிவிப்பார்கள். தமிழகத்தில் திட்டமிட்ட வன்முறை, தேசிய விரோதம் உள்ளது. எனவே தமிழகத்தில் பயங்கரவாத, நக்சலைட் கும்பல்கள், மதவாத பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். இவ்வாறு கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்