Skip to main content

தொடர்ந்து நடைபெறும் நீட் கொலைகள் என்று நிற்கும்?

Published on 13/09/2020 | Edited on 13/09/2020
NEET EXAM TAMILNADU

 

நீட் தேர்வு என்ற கொடூர அரக்கன் தமிழக மாணவர்களை தொடர்ந்து பழிவாங்கி வருகிறது. அரியலூர் அனிதா தொடங்கி இன்றுவரை 16 மாணவர்களை காவு வாங்கியுள்ளது. நேற்று நள்ளிரவு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த மாணவர் மோதிலால் தற்கொலை செய்துள்ளார். இந்த வருடத்தில் மட்டும் நான்கு மாணவர்கள் பரிதாபமாக இறந்து உள்ளார்கள்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாளரைகட் பகுதியில் எலக்ட்ரிகல்ஸ் கடை நடத்தி வரும் முருகேசன் கோமதி தம்பதியரின் மூத்த மகன் மோதிலால். இவர் குமாரபாளையம் ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில் நீட் தேர்வு மூன்றாவது முறையாக எழுத இருந்த நிலையில் நேற்று  இரவு எட்டு மணி அளவில்  மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மோதிலால் திருச்செங்கோடு கொசவம்பாளையம் பகுதியில் உள்ள மகேந்திரா பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பன்னிரண்டாம் வகுப்பு முடித்து அதில் 1081 மதிப்பெண்கள் பெற்று நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியில் செயல்பட்டு வரும் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்துவந்தார். 

ஏற்கனவே இரண்டு முறை மருத்துவராகும் கனவில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற இயலாத நிலையில் தனது மருத்துவராகும் கனவு பலிக்காதோ  என்ற மன அழுத்தத்திலிருந்த மோதிலால் இந்த முறை கரோனா காரணமாக முறையான வகுப்புகளுக்கு செல்ல முடியாமல் இருந்த சூழலில் மத்திய அரசு நீட் தேர்வு அறிவித்ததை அடுத்து தேர்வு எழுத இருந்த நிலையில் மன அழுத்தம் காரணமாக குடும்பத்தினருக்கு கடிதம் எழுதியதாக தெரிய வருகிறது.

தனது வீட்டின் அறையிலிருந்த மின் விசிறியில் தூக்கிட்டு மாணவன் மோதிலால் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு நேரில் வந்த திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் அசோக்குமார் மோதிலாலின்  உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் இன்று காலை மோதிலால் உடல் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

 

NEET EXAM TAMILNADU


இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாணவன் மோதிலால் இழப்புக்கு இரங்கல் தெரிவித்து திமுக இளைஞர் அணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நேரில் அனுப்பி வைத்தார். இன்று மாலை திருச்செங்கோட்டுக்கு வந்து மாணவன் மோதிலால் குடும்பத்தை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்  கூறியதோடு நீட் எனும் கொடூரம் மாணவ சமூகத்தின் உயிரைக் குடித்து வருகிறது. இந்த நீட் தேர்வு மாணவ சமூகத்திற்கு கூடாது. இதை மத்திய அரசு இனிமேலாவது புரிந்துகொண்டு மாணவனின் உயிரை காவு வாங்கக்கூடாது என்று கூறினார். 

தொடர்ந்து நடைபெறும் நீட் கொலைகள் என்று நிற்கும்?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.