Skip to main content

இடைத்தேர்தல் ஆளும் கட்சிக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்- கனிமொழி பிரச்சாரம்.

Published on 02/10/2019 | Edited on 02/10/2019

நாங்குநேரி இடைத்தேர்தலில் முதன் முதலாகப் பிரச்சாரத்தைத் துவக்கினார் தி.மு.க.வின் எம்.பி.யான கனிமொழி. இன்று தொகுதிக்குட்பட்ட களக்காடு நகரில் தேர்தல் காரியாலயத்தைத் திறந்து வைத்த கனிமொழி கூட்டணியின் வேட்பாளரான ரூபி மனோகரனுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அது சமயம் வேட்பாளர் ரூபி மனோகரன் காங்கிரஸ் தலைவர்கள் தொண்டர்கள் கூட்டணி கட்சியினர், தி.மு.க.வினர் என திரளாக வந்திருந்தனர். பிறகு தேர்தல் பரப்புரை நடத்திய கனிமொழி.

nanguneri assembly by election dmk kanimozhi mp start the election campaign

இது மிக முக்கியமான இடைத்தேர்தல் அன்னை சோனியா, தளபதியின் ஆசி பெற்ற வேட்பாளர் ரூபி மனோகரனை எனக்கு நீண்ட நாளாகவே தெரியும். மக்களுக்கு உதவுபவர், எளிமையானவர். அவர் மக்களுடனேயே உங்களிடையே இருப்பார். உங்களுக்குத் தேவையானதை நிச்சயம் செய்வார். இடைத்தேர்தல் என்றதும் ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் எல்லோரும் இங்கே வருவார்கள். 
 

இதற்கு முன்பாக இது போன்று இங்கே இவர்கள் வந்தார்களா? மக்களின் தண்ணீர் பிரச்சினை, ரேசன் பிரச்சினையைத் தீர்த்து வைத்தார்களா. எந்தப் பிரச்சினைகளைத்தான் தீர்த்து வைத்தார்கள். இந்த ஆட்சியில் எந்த ஒரு தொழிலையாவாது கொண்டு வந்தார்களா? யாருக்காவது வேலை கொடுத்திருக்கிறார்களா. வீட்டுக்கு வீடு படித்து வேலையில்லாமல் இருப்பவர்கள் அதிகம். அவர்கள் பிரச்சினை தீர்க்கப்பட்டதா வெளிநாடு தொழில் முதலீடுகள் வரும், வரும், என்று சொல்கிறார்கள். அதற்காகத் தான் தளபதி ஸ்டாலின் வெள்ளை  அறிக்கை கேட்கிறார்.

nanguneri assembly by election dmk kanimozhi mp start the election campaign

தலைவர் கலைஞர் ஆட்சியில் தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டன. அவர் வெளி நாடெல்லாம் செல்லவில்லை. ஆனா வெளிநாடு தொழில் முதலீடுகள் தமிழகத்தைத் தேடி வந்தது. இங்கேயுள்ள பச்சையாறு, கொடுமுடி ஆறு, ராமநதி, கடனாநதி, அடவிநயினார் அணை போன்ற அணைகள் அனைத்தும் கலைஞர் கொண்டு வந்தது. இவர்கள் எதையாவது செய்தார்களா? இந்தியில் படித்து இந்தியில் பரீட்சை எழுதினாத்தான் வேலையாம். நமக்குக் கிடைக்கிற வேலை வாய்ப்பையல்லாம் அவங்க தட்டிப் பறிச்சிட்டுப் போறாங்க. இதை தட்டிக் கேட்டதா இந்த அரசு. ஆனா நீட்  தேர்வக் கொண்டு வந்து தமிழ் நாட்ட முடக்கிட்டாங்க. இந்த அரசு கேக்கல. இன்றைக்கும் வெளிநாட்டுல, இங்க பிரபலமா இருக்குற தமிழக டாக்டர்களெல்லாம் நீட் பரீட்சையா எழுதுனாங்க. நிச்சயம் தி.மு.க. ஆட்சிக்கு வரும் தளபதி ஸ்டாலின் மக்களின் குறைகளை தீர்த்து வைப்பார். இந்தத் தேர்தல் ஆளும் கட்சிக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்று பேசினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.