Skip to main content

தொடர்கதையாகும் ஆடுகளின் கோர மரணம்; "மர்ம விலங்கு நடமாட்டமா?" - வேதனையில் விவசாயிகள்

Published on 31/05/2021 | Edited on 31/05/2021
‘A series of deaths of goats stuffed in a bar, will the mysterious animal not move?’ - Farmers in agony

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலையில் உள்ளது மூங்கில்துறைப்பட்டு. இதனருகில் உள்ள மணலூர், காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தேவராஜ். விவசாயியான இவரும் இவரது மனைவி சரோஜாவும் விவசாயத் தொழில்கள் செய்வதோடு கூடுதல் வருமானத்திற்காக 50க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்கள். இந்த ஆடுகளை கல்வராயன் மலைப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வார்கள். பின்பு மாலை நேரத்தில் தங்கள் நிலத்தில் கொண்டு வந்து அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்குச் சென்று விடுவார்கள். 

 

மீண்டும் தினசரி காலையில் பட்டியில் அடைக்கப்பட்டிருக்கும் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது வழக்கம். இது போன்று நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்ல தேவராஜ் மனைவி சரோஜா பட்டிக்குச் சென்றுள்ளார். அங்கே அவர்கள் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் பத்து ஆடுகள் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் கடித்துக் குதறப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளன. மேலும், 10 ஆடுகள் கடித்துக் குதறப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சரோஜா தனது கணவருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் அப்பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர் துரைசாமிக்கு தகவல் கொடுத்துள்ளார். கால்நடை மருத்துவர் துரைசாமி விரைந்து சென்று பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் எப்படி இறந்தன என்பது குறித்து ஆய்வு செய்ததோடு படுகாயமடைந்து ஆடுகளுக்கும் சிகிச்சை அளித்துள்ளார்.

 

இறந்த ஆடுகளைப் பிரேதப் பரிசோதனை செய்து அதே இடத்தில் புதைப்பதற்கும் ஏற்பாடு செய்துள்ளார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டதோடு சங்கராபுரம் தாசில்தாருக்கு ஆடுகள் இறந்ததற்கான அறிக்கை தயாரித்து அனுப்பியுள்ளார். மேலும், கடந்த 14ஆம் தேதி இதே போன்ற சம்பவத்தில் 10 ஆடுகள் கடித்துக் குதறப்பட்டு இறந்து கிடந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அடுத்தடுத்து நடு இரவில் பட்டியில் அடைக்கப்பட்ட ஆடுகளைத் தாக்கி கடித்துக் குதறிச் சாகடிக்கும் மர்ம விலங்கு என்னவாக இருக்கும் அதைத் தேடிப்பிடிக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

"இறந்துபோன ஆடுகளுக்கு அரசு இழப்பீடு தர வேண்டும், மர்ம விலங்கின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அந்த விலங்கைப் பிடிக்க வேண்டும்" என்று அப்பகுதியில் உள்ள கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் ஆடு மாடுகள் வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆடுகளைக் கடித்துக் குதறிச் சாகடித்து வரும் மர்ம விலங்குகள் ஆட்டத்தினால் இரவு நேரங்களில் விவசாய நிலத்திற்குப் பம்பு செட்டுகள் மூலம் தண்ணீர் பாய்ச்ச செல்லும் விவசாயிகளும் அச்சப்படுகின்றனர். எனவே, இந்த மர்ம விலங்கு நடமாட்டம் குறித்து வனத்துறையினர் விரைவில் தீர்வு காண வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.