Skip to main content

பெற்ற தாயைக் கொன்ற சிறுமி! ஆண் நண்பர்கள் சகவாசம் காரணமா?

Published on 28/03/2022 | Edited on 28/03/2022

 

mother passed away police arrested daughter and her boy friend

 

தூத்துக்குடிப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாடசாமி (41). இவரின் மனைவி முனியலட்சுமி (39). இந்த தம்பதியருக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தனர். இதில் தம்பதியரின் மூத்த மகளான 17 வயது சிறுமி தூத்துக்குடி பாலி டெக்னிக்கில் முதலாமாண்டு பயின்று வருகிறார். 17 வயது சிறுமியும் முனியலட்சுமியும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். மாடசாமி மற்ற மூன்று பிள்ளைகளுடன் தனது மாமியார் வீட்டினருகே வசித்து வருகிறார்.

 

இந்த நிலையில், நேற்று அதிகாலை 17 வயது சிறுமி, தனது தாய் முனியலட்சுமியை யாரோ 4 பேர் வந்து கொலை செய்து விட்டுத் தப்பியோடியிருக்கிறார்கள் என்று சர்வ சாதாரணமாக சலனமில்லாமல் தென்பாகம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

 

சம்பவ இடத்திற்கு வந்த டவுண் டி.எஸ்.பி. கணேஷ், தென் பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் உள்ளிட்ட போலீசார், கொலையுண்டு கிடந்த முனியலட்சுமியின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது மகள் 17 வயது சிறுமியிடம் விசாரித்தபோது சிறுமியோ முன்னுக்குப் பின் முரணாக சந்தேகப்படும்படியாக பதிலளித்திருக்கிறார்.

 

இதில் சந்தேகமடைந்த போலீசார், 17 வயது சிறுமியிடம், சற்றுக் கறாராக விசாரித்தபோது அதிர்ச்சி தரும் பல விஷயங்கள் வெளியே வந்திருக்கின்றன. கணவரைப் பிரிந்த முனியலட்சுமி தன் மகள் 17 வயது சிறுமியோடு வசித்து வந்தாலும், அவருக்கு வேறு ஒரு நபருடன் முறையற்ற தொடர்பு ஏற்பட்டு அவருடன் சேர்ந்து வசித்திருக்கிறார். தன் 17 வயது மகளுக்கு வேறு ஆண் நண்பர்கள் சகவாசம் உண்டு என்பதையறிந்த முனியலட்சுமி, பிற நபர்களுடன் அவளை பாலியியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியிருக்கிறாராம்.

 

mother passed away police arrested daughter and her boy friend

 

இதில் ஆத்திரம் அடைந்த சிறுமி, தன் ஆண் நண்பரான முத்தையாபுரம் கண்ணன் (22) என்பவரிடம் தெரிவித்திருக்கிறார். இதன் பின் கண்ணன் தனது சகாக்களான கோடாங்கி என்ற முத்து (25), தங்ககுமார் (28) ஆகியோருடன் சேர்ந்து முனியலட்சுமியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் 4 பேரும் சேர்ந்து முனியலட்சுமியின் கழுத்தை  துணியால் இறுக்கியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்தனர் என்று சிறுமி போலீசாரிடம் தெரிவித்திருக்கிறாராம். இதன் பிறகே 17 வயதான சிறுமி அவரது ஆண் நண்பர் கண்ணன் இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார் மற்றவர்களைத் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.