Skip to main content

துரத்தியடிக்கப்பட்ட சாமியார்... ஹெச்.ராஜா மருமகன் மீது பரபரப்பு புகார்... சாரதா நிகேதன் கல்லூரி ரணகளம்... குத்தகை சொத்து அக்கப்போர்?

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

Leasing Property


"பல கோடி மதிப்புள்ள கல்லூரிகளின் சொத்துகளைக் குறி வைத்து, கட்டப்பஞ்சாயத்து செய்து தன்னை தகாத வார்த்தைகளால் பேசி, கடுமையான ஆயுதங்களால் தாக்கி, துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென" ஸ்ரீ சாரதா நிகேதன் கல்லூரியில் ஆசிரமத்தைச் சேர்ந்த சுகுனாநந்தா எனும் சாமியார் சோமநாதபுரம் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், புகாருக்குக் காவல் நிலையத்தாரால் மனு ரசீது அளிக்கப்பட்டுள்ளது. எனினும், குற்றச்சாட்டிற்கு ஆளான நபர் சூர்யபிரகாஷ் ஹெச்.ராஜாவின் மருமகன் என்பது வெளியாக அரசியல் வட்டாரமே பரப்பரப்பாகியுள்ளது.
 


கரூர் பசுபதிபாளையத்தில் வசித்து வரும் சுவாமி ஆத்மானந்தா பக்தர்களால் வழங்கப்பட்ட பல்வேறு சொத்துகளை ஸ்ரீ சாரதா நிகேதன் ட்ரஸ்ட் எனும் பெயரில் மடைமாற்றி தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் சொத்துகளை வைத்துள்ளர். இந்த ஸ்ரீ சாரதா நிகேதன் ட்ரஸ்ட் மேற்பார்வையில் சேலம் கணவாய் புதூரில் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியும், சென்னையில் ஒரு அனாதை ஆசிரமத்தையும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் மகளிர் கல்லூரியும் நடத்தப்பட்டு வருகின்றது, மேற்கண்ட ட்ரஸ்டிற்கு ஏழு நிர்வாகக்குழு உறுப்பினர்கள் என்கின்ற அடிப்படை உருவாக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட உறுப்பினர்களே சொத்துகளை நிர்வகிக்கலாம் என ட்ரஸ்டால் முடிவெடுக்கப்பட்டு அதன்படியே தொன்று தொட்டு நடைப்பெற்று வருகின்றது.

இவ்வேளையில், காரைக்குடி அருகேயுள்ள அமராவதி புதூரில் உள்ள ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியின் சொத்துகளையும் மற்றும் ஸ்ரீ சாரதா நிகேதன் ட்ரஸ்ட் உறுப்பினர்களாகச் சிலரையும் தங்கள் பக்கம் மாற்றியமைக்க வெவ்வேறு இரு தரப்பினர், ட்ரஸ்டின் தலைவரும், மடத்தின் அதிபருமான சுவாமி ஆத்மானந்தாவிடம் பல நாட்களாக பஞ்சாயத்து செய்து நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதற்காக சுவாமி ஆத்மானந்தா கடத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
 


இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று இரவு 9 மணியளவில் ஸ்ரீ சாரதா நிகேதன் ட்ரஸ்ட் தலைவரான ஆத்மானந்தாவின் சீடர் சுகுனாநந்தா எனும் 76 வயது சாமியார் சட்டை கிழிந்து, உடலெங்கும் காயம்பட்ட நிலையில் சோமநாதபுரம் காவல் நிலையத்திற்குச் சென்று, "விமானப்படையின் முன்னாள் அதிகாரியான நான், என்னுடைய மனைவி இறந்த நிலையில் ஆன்மிக ஈடுபாடு கொண்டு சுவாமி ஆத்மானந்தாவிடம் சேர்ந்து தொண்டு புரிந்து வந்தேன். நேற்று மாலையில் கல்லூரிக்கு வந்த 30க்கும் மேற்பட்டவர்கள் சாமியார் எங்கேடா..? அவனைக் கூப்பிடு..? கண்டவனையெல்லாம் ட்ரஸ்ட் உறுப்பினராகப் போட அவனுக்கு என்ன உரிமை இருக்கு..? ஒழுங்கு மரியாதையாகக் கையெழுத்துப் போட்டுட்டு ஊரைவிட்டு ஓடிடுங்க," எனக் கூறிக் கொண்டே சாமியைத் தேடினார்கள். பிறகு அவர் இருந்த அறைக்கதவை உடைத்து அவரை எழுப்பி உட்கார வைத்து, "புதிய ட்ரஸ்ட் உறுப்பினர்களாக சுந்தரவள்ளி, ஷாலினி, சிவஞான பிரியா, ரேவதி மற்றும் ஞானேஸ்வரை போடனும்." என மிரட்டினார்கள். இது கண்டு நான் கத்த என்னை பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். அது வேறு யாருமல்ல பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மருமகன் சூர்யபிரகாஷ் மற்றும் பா.ஜ.க. மாவட்ட தலைவர் செல்வராஜ் மற்றும் இந்து முன்னணி நிர்வாகி அக்னிபாலா உட்பட 30 பேர்" எனப் புகாரளித்தார். காவல்நிலையத்தாரும் வேறு வழியில்லாமல் புகார் மனு ஏற்பு ரசீது அளித்தனர். எனினும், "தனக்கு ஏற்பட்ட அவமானங்களையும், தாக்குதலையும், சுவாமி ஆத்மானந்தாவின் நிலையையும் வீடியோவாக்கி வாட்ஸ் அப்பில் பரவவிட்டார் சீடர் சுகுனாநந்தா. வைரலான வீடியோவால் அரசியல் வட்டாரமே பரப்பரப்பானது.

இது இப்படியிருக்க, "சாரதா நிகேதன் மகளிர் கல்லூரிக்குச் சொந்தமானவர் ஆர்.எஸ்.எஸ்ஸை சேர்ந்தவர். தற்போது இந்தக் கல்லூரியைத் திருப்பத்தூர் தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியகருப்பன் காரைக்குடித் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமசாமி இருவரும் சேர்ந்து அவர்களது குண்டர் படைகளை வைத்துக்கொண்டு மொத்த கல்லூரியையும் மிரட்டி தன் பெயருக்கு எழுதி கேட்கின்றனர். இதன் விவரம் அறிந்து தற்போது அங்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வினர் அனைவரும் கல்லூரி நிர்வாகிக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கியுள்ளனர். இந்தச் செய்தி அறிந்த ஹெச்.ராஜா ஜி அந்தக் கல்லூரி நிர்வாகியைச் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கின்றார். இப்படியே போனால் நாளை உங்களுடைய இடமாக இருந்தாலும் என்னுடைய இடமாக இருந்தாலும் தி.மு.க. குண்டர்களால் மிரட்டி எழுதி வாங்கப்பட்டுவிடும்.." என்கின்ற முகவரியில்லாத செய்தியும் வாட்ஸ்ப்பில் வைரலாகி வருகின்றது.

 

http://onelink.to/nknapp

 

இது குறித்து கருத்தறிய பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மருமகன் சூர்யபிரகாஷினைத் தொடர்பு கொண்டோம்., "இது முழுக்க முழுக்கப் பொய்.! கை உடைந்து மருத்துவச் சிகிச்சையில் இருக்கும் நான் எப்படி அங்கே போயிருப்பேன். எப்படி அடிக்க முடியும்..? அது போக இந்தச் சொத்துகளை அபகரிப்பதற்காக அலையும் கூட்டத்தினை சேர்ந்தவர் இந்த சுகுனாநந்தா. இந்து மதத்திற்குச் சொந்தமான சொத்துகளைத் தகுதியில்லாத சிலர் அபகரிக்கவுள்ளனர் என்பதால் தலையிட்டேன். அவ்வளேவே.! எனக்கும் நடந்த சம்பவத்திற்கும் எந்தப் பொறுப்பும் இல்லை. தி.மு.க., காங்கிரஸாருக்கு எவ்வித சம்பந்தமுமில்லை." என்கிறார் அவர்.

"முதலில் இந்தச் சொத்து ஸ்ரீ சாரதா நிகேதன் ட்ரஸ்டிற்கே சொந்தமானது அல்ல.! ஸ்ரீ சாரதா நிகேதன் கல்லூரி அமைந்துள்ள இடம் அமராவதிபுதூர் கிராமம் பட்டா எண் 365, சர்வே எண் 160/18க்குட்ப்ட்ட 16 ஏக்கர் 77 செண்ட் அளவிலான இடம் சிவகங்கை மாவட்டம் கண்டனூர் பாலையூரைச் சேர்ந்த ராமசாமிக்கு சேர்ந்தது. அவரிடமிருந்து குத்தகைக்கு வாங்கியவர்கள் இப்பொழுது இதனை விற்கும் முயற்சியில் இருக்கின்றார்கள்." என்கின்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.