Skip to main content

கோவையில் ஈஷா யோகா மைய ஊழியர் யானை தாக்கி பலி!

Published on 10/09/2017 | Edited on 10/09/2017
கோவையில் ஈஷா யோகா மைய ஊழியர் யானை தாக்கி பலி!

கோவை ஆலாந்துறை அடுத்த பூண்டியில் பிரபல ஈஷா யோக மையம் இயங்கி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இங்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு ஈஷா யோக மையத்தின் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் ராஜஸ்தானை சார்ந்த மனீஷ் என்பவர், ஈஷா மையத்தின் அருகில் சென்றுகொண்டிருந்த போது காட்டுக்குள் இருந்து வந்த ஒற்றை யானை மனீஷை தாக்கி காலால் மிதித்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்ட சக ஊழியர்கள் அங்கு சென்று பார்த்த போது ஒற்றை யானை நின்றிருந்ததை பார்த்த அவர்கள் சத்தம் எழுப்பி யானையை விரட்டினர்.

தொடர்ந்து வனத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் இது குறித்து தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஈஷா யோக மையம் வனப்பகுதியில் யானையின் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக புகார்கள் எழுந்து வரும் சூழலில் அந்த மையத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- அருள்குமார்

சார்ந்த செய்திகள்