Skip to main content

‘இடைநிலை ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு’ -  தேர்வு வாரியம் அறிவிப்பு!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
Intermediate Teacher Exam Postponement Exam Board Notification

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அறிவித்தது. அப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2024 ஆம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்குப் போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய 15.03.2024 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் பலரும் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரினர். அதனடிப்படையில் இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 15.03.2024 இல் இருந்து 20.03.2024 மாலை 5.00 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. மேலும் இந்த மாதம் 23 ஆம் தேதி இந்த தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இடைநிலை ஆசிரியர் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் சார்பில் இன்று (11.06.2024) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அறிவிக்கை எண் 01/2024 இன் படி 23.06.2024 அன்று நடைபெறவிருந்த இடைநிலை ஆசிரியர் (SGT) தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த தேர்வானது வருகின்ற 21.07.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் என விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது” எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Attention those who have applied for the secondary teacher exam

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அறிவித்தது. அப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2024 ஆம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்குப் போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய 15.03.2024 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் பலரும் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்யக் கூடுதல் கால அவகாசம் கோரினர். அதனடிப்படையில் இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யக் கடைசி தேதி 15.03.2024 இல் இருந்து 20.03.2024 மாலை 5.00 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. மேலும் ஜூன் மாதம் 23 ஆம் தேதி இந்த தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் இடைநிலை ஆசிரியர் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த தேர்வானது வருகின்ற 21.07.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் எனத்  தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Attention those who have applied for the secondary teacher exam

இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2023-2024 ஆம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் தேர்வு வரும் 21 ஆம் தேதி (21.07.2024) அன்று நடத்தப்பட உள்ளது. இத்தேர்வினை எழுத 26 ஆயிரத்து 510 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://www.trb.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் இன்று (02.07.2024) முதல் அவர்களது பயனர் குறியீடு (User id) மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வாரக் காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Release of NEET Re-examination Results

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.மறுபுறம் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

நீட் தேர்வு எழுதிய 63 மாணவர்களை தகுதி நீக்கம் செய்து தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது. பீகாரில் உள்ள தேர்வு மையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்ட நிலையில் இந்தத் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. 1,563 மாணவர்கள் நீட் தேர்வில் பெற்ற கருணை மதிப்பெண் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில்  ஜூன் 23ம் தேதி நீட் மறுதேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 816 பேர் நீட் மறுதேர்வு எழுதி உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. இந்நிலையில் நீட் மறு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. www.exams.nta.ac.in/NEET/ என்ற இணையதளத்தில் நீட் மறு தேர்வு முடிவுகளை அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.