Skip to main content

பழங்காநத்தத்தில் மூதாட்டியை கொன்று நகை கொள்ளை!!

Published on 16/07/2020 | Edited on 16/07/2020
incident in palanganatham

 

மதுரை, பழங்காநத்தம் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியை கொலை செய்து 5 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பஞ்சவர்ணம் என்ற அந்த மூதாட்டி மீது மிளகாய் பொடியை தூவி, வெட்டிக் கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்துள்ளனர். 5 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை திருடிச் சென்ற நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மதுரை, பழங்காநத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்