Skip to main content

உயிர் பலி வாங்கிய கார் ஏ.சி...!

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே காரில் ஏ.சி. போட்டு படுத்து தூங்கிய மேலாளர் பரிதாபமாக உயிர் இறந்தார்.

 

car A/C

 

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா கமலாபுரம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அனந்தகிருஷ்ணன் 44 வயது. அனந்தகிருஷ்ணன் ஈரோடு மாவட்டம் ரகுபதி நாயக்கன் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கிளப்பில் மேனேஜராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம்  காலை 10 மணியளவில் அனந்தகிருஷ்ணன் திருச்சியில் உள்ள தனது அம்மாவுக்கு போன் செய்து தான் இன்று கிளம்பி ஊருக்கு வருவதாக தகவல் கூறியிருக்கிறார் பிறகு அவருடைய நண்பர் ஒருவரின் கார் மூலம் அனந்தகிருஷ்ணன் திருச்சிக்கு புறப்பட்டு உள்ளார்.

 

மாலை 6.30  மணி அளவில்  அனந்தகிருஷ்ணன் ஈரோடு முத்துக்கவுண்டன் பாளையம் -  பரிசல் துறை சாலையில் காரில்  வந்துகொண்டிருந்தபோது அசதியாக இருக்க காரில் ஏ.சி.போட்டு சிறிது நேரம் தூங்கிவிட்டு செல்லலாம் என்று நினைத்து சாலையோரம் காரை நிறுத்தி ஏசி போட்டு தூங்கியுள்ளார். பின்னர் சிறிது நேரத்திலேயே  மூச்சு திணறல் ஏற்பட்டு அப்படியே காருக்குள் மயங்கி கிடந்துள்ளார். அவ்வழியாக வந்தவர்கள் காருக்குள் மயங்கி கிடப்பதை பார்த்து கார் கதவை திறந்துள்ளனர். பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அனந்தகிருஷ்ணன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
 

உடல் சோர்வு, மதிய வெயிலின் தாக்கத்திற்கு காரில் ஓடும் ஏ.சி.யை போட்டு சிறிது நேரம் தூங்கலாம் என நினைத்து தூங்கியவர் ஆக்ஸிஜன் குறைந்து மூச்சு திணறல் ஏற்பட்டு அப்படியே காருக்குள் மயங்கி விழுந்து இறந்துள்ளார். இப்படித்தான் காரில் ஏ.சி.போட்டு தூங்கும் வழக்கம் பலருக்கும் உள்ளது. ஆனால் அது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது. மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு; மதுரையில் பரபரப்பு!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiffin box range Sensation in Madurai

மதுரை அருகே டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு என்ற பகுதியில் காரின் அருகே நின்று கொண்டிருந்தவர் மீது நேற்று இரவு (20.04.2024)  டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த நவீன்குமார் என்பவர் காயமடைந்தார்.

மேலும் டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதில் நவீன்குமாருக்கு அருகில் இருந்த ஆட்டோக்காரர் கண்ணன் என்பவர் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த கீழவளவு காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த இருவரையும் போலீசார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

Next Story

காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
madurai thirumangalam nearest two wheeler car incident

மதுரையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை என்ற பகுதியில்  திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் மதுரையில் உள்ள வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தளவாய்புரத்தில் உள்ள கோவிலுக்கு ஆன்மிகப் பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பலியானவர்களின் உடல்கள் திருமங்கலம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.