Skip to main content

ஆடி, பாடி, கும்மியடித்த அங்கன்வாடி பெண் பணியாளர்கள்...

Published on 25/09/2019 | Edited on 25/09/2019

இந்த மாதம் முழுக்க அங்கன்வாடி பெண் பணியாளர்களை வழக்கமான பணிகளுக்கிடையே புதிய செயல்பாடுகளில் இறக்கிவிட்டுள்ளது அரசு நிர்வாகம்.

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக அறிவித்துள்ளது. இந்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லும் புதிய வேலையில்தான் தமிழகம் முழுக்க அங்கன்வாடி பெண் பணியாளர்களை வீதிகளில் இறக்கியுள்ளது. அதன்படி கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள அனைவருக்கும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு கண்காட்சியும்,  ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், உணவு தானியங்கள், கீரை வகைகள் எவை, எவை  என்பது பற்றி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு அங்கன்வாடி பள்ளியில் பணிபுரியும் பணியாளர்கள்,ஆசிரியர்கள் விரிவாக எடுத்துக் கூறி வருகிறார்கள். 

 

erode

 

மேலும் மாணவ மாணவிகள், பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த இனிப்பு மாவு மற்றும் பாயாசம் வழங்குகிறார்கள். கூடுதலாக ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மூலமாக மக்களுக்கு என்னென்ன நோய்களெல்லாம் தீர்க்கப்படும், அதேபோல் நமக்கு  நோய்கள் வராமல் தடுக்க நாம் எவ்வாறு  இயற்கை காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் இந்த பிரச்சார யுத்தி வித்தியாசமான முறையில் செய்யப்படுகிறது. அங்கன்வாடி பெண் பணியாளர்கள் சிலர் பாடல் மூலமும், பலர் ஆடல் மூலமும் மேலும் சிலர் கும்மியடித்து ஆடியும் இந்த பிரச்சாரத்தை செய்கிறார்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய பெண் ஆசிரியைகள் சிலர் "ஏங்க சார் எங்களுக்கு என்ன தெருவில் கும்மியடித்து ஆட ஆசையா மேலதிகாரிகள் உத்தரவு போடுறாங்க சார். இந்த திட்டம் மத்திய அரசு திட்டம் இதை தமிழக அரசு முழுமையாக விசுவாசமாக செய்ததாக மத்திய அரசுக்கு காட்ட வேண்டும் என்று எங்களை கட்டாயப்படுத்துகிறார்கள். நாங்கள் யாரிடம் சொல்லி முறையிட" என பரிதாபமாக கூறினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.