Skip to main content

வீடில்லா மக்களுக்கு எப்படி தடுப்பூசி..? உயர்நீதிமன்றத்தில் பதிலளித்த தமிழக அரசு..!

Published on 26/05/2021 | Edited on 26/05/2021

 

How to vaccinate homeless people ..? Government of Tamil Nadu responds in High Court ..!


தமிழகத்தில் வீடில்லா மக்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.முருகானந்தம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இலவச தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும், அதற்கு அடையாள அட்டைகள் கேட்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

 

ஆனால் அடையாள அட்டை இல்லாத வீடில்லா மக்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவோ, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவோ முடியாத நிலையில் உள்ளதாகவும், தடுப்பூசி செலுத்தினால் தான் அவர்களின் உயிரை பாதுகாக்க முடியும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

 

தொற்று பாதிக்கும் அபாயம் அதிகமுள்ள வீடில்லா மக்களை கணக்கெடுத்து, அடையாள அட்டைகள் இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

 

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் சி.சரவணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், வீடில்லாத மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

 

இதையடுத்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான வழக்குகளுடன் விசாரிப்பதற்காக தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

செந்தில் பாலாஜி வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Senthil Balaji Case High Court action order

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

மேலும் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்ததுடன் இந்த வழக்கை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் சென்னை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் அதனைத் தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை. 

Senthil Balaji Case High Court action order

இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 4 மாதம் அவகாசம் வழங்க உத்தரவிடக்கோரி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உயர் நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பிய கடிதம் எழுதி இருந்தார். அதன் அடிப்படையில் வழக்கு விசாரணை நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், விசாரணை நீதிமன்றங்களுக்கு எந்த காலவரம்பும் நிர்ணயிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி ஜெயச்சந்திரன், “நீதிபதி அல்லி இந்த் வழக்கை சரியாக கையாண்டு வருகிறார். உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்கிறேன். அதே வேளையில் நீதிபதி அல்லி நான்கு மாத கால அவகாசம் கேட்டுள்ளதால் மேலும் நான்கு மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிடுகிறேன்”எனத் தெரிவித்தார். 

Next Story

‘கள்ளச்சாராய உயிரிழப்பு’ - அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
High Court order to kallakurichi incident report! 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இந்தச் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என அதிமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று (20.06.2024) வழக்கு தொடரப்பட்டது. அதிமுக சட்டத்துறை செயலாளரும்,  ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான இன்பதுரை இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், இறந்தவர்கள் உடலுக்கு நேர்மையாக பிரேதப் பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்; கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. 

High Court order to kallakurichi incident report! 

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (21.06.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் வாதிடுகையில், “காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “கள்ளச்சாராய விற்பனையத் தடுக்க கடந்த ஓராண்டில் காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன?. கள்ளச் சாராயம் தொடர்பாக தமிழகத்தில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கள்ளச் சாராய உயிரிழப்பு குறித்து அறிக்கை தர அரசுக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர். மேலும் நீதிபதி குமரேஷ் பாபு, “கள்ளச் சாராய மரணம் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் மூலம் தெரிந்துகொண்டேன்” எனத் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கை  ஜூன் 26 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.