Skip to main content

ஓசூரில் அரிவாளால் வெட்டி ரவுடி படுகொலை; அடுத்தடுத்த கொலைகளால் பொதுமக்கள் கிலி! 

Published on 03/03/2022 | Edited on 03/03/2022

 

hosur criminal passed away police in investigation

 

ஓசூரில் வட்டித்தொழில் செய்து வந்த ரவுடி மர்ம நபர்களால் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள மூன்று கொலை சம்பவங்களால் ஓசூர் நகர மக்கள் கிலியில் உறைந்து போயுள்ளனர். 

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அந்திவாடி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் உதயகுமார் (32). கார் ஓட்டுநர். அத்துடன், வட்டித் தொழிலும் செய்து வந்தார். பிப். 28ம் தேதி இரவு 11 மணியளவில், அந்தப் பகுதியில் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், உதயகுமாரை திடீரென்று சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர், நிகழ்விடத்திலேயே பலியானார். அவருடைய தலையில் சில வெட்டுகள் ஆழமாக இறங்கி இருந்தது. 

 

இதுகுறித்து மத்திகிரி காவல்நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். உதயகுமாரின் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையுண்ட உதயகுமாருக்கு மனைவி, இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2020ல் நாகராஜ் என்பவரை வெட்டிக் கொல்ல முயன்றதாக அவர் மீது மத்திகிரி காவல்நிலையத்தில் ஒரு வழக்கு விசாரணையில் உள்ளது. 

 

அந்த வழக்கின் மீதான விசாரணை வரும் 8ம் தேதி ஓசூர் நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. இந்த நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டு இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால், அவரை பழிவாங்கும் நோக்கத்தில் கொலை செய்துள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. அவர் உள்ளூரைச் சேர்ந்த முக்கிய ரவுடி ஒருவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாகவும், அவரை முன்னிறுத்தி வட்டித்தொழில் செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. 

 

கொலையான நபர் எந்த டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கினார் என்பது குறித்தும் விசாரிக்கின்றனர். கொலையாளிகள் அவரை டாஸ்மாக் கடையில் இருந்தே பின்தொடர்ந்து வந்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கும் காவல்துறையினர், வரும் வழித்தடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் கொலையாளிகளின் உருவங்கள் பதிந்துள்ளதா என்பது குறித்தும் தீவிரமாக விசாரிக்கின்றனர். 

 

இந்தத் தகவல்கள் அடிப்படையில் மத்திகிரி காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

ஒரு வாரத்தில் 3 கொலை: 

 

ஓசூரில் கடந்த ஒரு வாரத்தில் உதயகுமார் உள்பட மூன்று பேர் கொல்லப்பட்டு உள்ளனர். பெங்களூருவுக்கு அருகில் ஓசூர் மாநகரம் இருப்பதால், கொலையாளிகள் குற்றங்களை நிகழ்த்திவிட்டு எளிதில் பெங்களூருவுக்கு தப்பிச்சென்று பதுங்கி விடுகின்றனர். இதனால் குற்றவாளிகளைப் பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், கனரக தொழிற்சாலைகள், சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஐடி நிறுவனங்கள் நிறைந்த பகுதி என்பதால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வேலை தேடி ஓசூருக்கு படையெடுக்கின்றனர். இதனால்தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் பகுதி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

தொழில் நகரம் என்பதால் கோடீஸ்வரர்களும் பணப்புழக்கமும் அதிகம். அதனால் குற்றங்களும் சகஜமாக அரங்கேறி வருகின்றன. அடுத்தடுத்த கொலைகளால் ஓசூர் நகர மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.