Skip to main content

''இந்து வேற தமிழன் வேறா...? எல்லாம் ஒன்னு தான்''-எல்.முருகன் பேட்டி

Published on 08/10/2022 | Edited on 08/10/2022

 

 "Hindu and Tamil are different...? Everything is one'' - L. Murugan interview

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா  நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசினார். அதில் திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல் ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கின்றனர் என விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து வெற்றிமாறனுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர்கள் எல்.முருகன் பேசுகையில், ''வெள்ளைக்காரங்க வரலாற்றை திருத்தி பொய்யான வரலாற்றை சொன்னார்கள். அதற்குப் பிறகு கம்யூனிஸ்ட்காரர்களும், காங்கிரஸ்காரர்களும் நமது இந்தியாவின் வரலாற்றை திருத்தினார்கள். இன்றைக்கு இருக்கின்ற இந்த மாதிரியான குரூப் தமிழகத்தினுடைய வரலாறை, பண்பாட்டை கலாச்சாரத்தை சிதைப்பதற்கு எத்தனிக்கிறார்கள். அது நடக்காது. தமிழகம் ஆன்மீக பூமி. மக்கள் இறை நம்பிக்கை உள்ளவர்கள். இப்பொழுது மட்டுமல்ல சங்க காலம் முதற்கொண்டு தமிழ் மக்கள் ஆன்மீகத்தில் ஒன்றிணைந்து பிறந்தவர்கள். ஏதோ ஒன்று இரண்டு பேர் சொல்வதற்காக ஆன்மீகம் தமிழ்நாட்டில் இல்லை என்பது நடக்காது.

 

ராஜராஜ சோழன் இந்து தானே. இந்து தமிழன் ஒன்னு தான். இந்து வேற தமிழன் வேறையா? தமிழக முதல்வர் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவில்லை, ஆயுத பூஜைக்கு வாழ்த்து சொல்லவில்லை, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. நாங்கள் வேல் யாத்திரை நடத்தினோம். தமிழகம் முழுவதும் பிரபலமானது. அப்பொழுது அவர் ஆட்சிக்கு வருவதற்கு குதித்துக் கொண்டிருந்தார். எங்க மக்கள் எல்லாம் நமக்கு ஓட்டு போடாமல் நம்மை புறக்கணித்து விடுவார்களோ என்று நான் எந்த இடத்தில் வேல் பிடித்தனோ அதே திருத்தணிக்கு சென்று வேலை பிடித்தார். அவர் பிடித்ததோடு மட்டுமல்லாமல் அவரது மகனும் பிடித்தார். அவர் மட்டுமல்லாது அவரது கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த சிலர் கூட வேலை பிடித்துக் கொண்டு திரிந்தார்கள். தேர்தல் முடிந்த பிறகு, ஓட்டை எல்லாம் வாங்கிய பிறகு அதற்கு உல்டாவாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆ.ராசா மாதிரி ஆட்கள் இன்றைக்கு இந்து மக்களுக்கு எதிராக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது தனக்கு எதிராக இருந்ததை அறிந்துகொண்ட முதல்வர் தற்பொழுது தாங்கள் ஆன்மீகத்துக்கு எதிரானவர்கள் அல்ல என்று தெரிவித்து வருகிறார். ஆனால் திமுக ஒவ்வொரு நேரமும், ஒவ்வொரு பொழுதும் ஆபத்து வரும்போது அந்த நேரத்தில் நாங்கள் ஆன்மீகத்துக்கு ஆதரவானவர்கள் என்று வெளி உலகத்துக்கு காட்டிக் கொள்கிறார்கள்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.