வெப்பச்சலனம் காரணமாக கடலூர், நாகை, காஞ்சிபுரம், திருவருர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தஞ்சை, சிவகங்கை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில பகுதிகளில் மழை பொழிய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் ஆட்சியர் அலுவகலகத்தில் 6 சென்டி மீட்டர் மழையும், புதுச்சேரியில் 4 சென்டிமீட்டர் மழையும், கேளம்பாக்கம், மண்டபத்தில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.