Skip to main content

சுட்டுக்கொல்லப்பட்ட நக்சல்களின் உடல்களை மேலும் 4 நாட்கள் பாதுகாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

கேரளா அட்டப்பட்டி அமைதி பள்ளத்தாக்கில் நக்சல்சல்கள் தங்கி இருந்ததாக போலீசார் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் உள்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கேரள போலீசார் கூறினார்கள். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த  மணிவாசகம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கல்லூர் பகுதியை சேர்ந்த முத்து மகன் கார்த்தி என்கிற கண்ணன் என்பதும் அடையாளம் காணப்பட்டதாக அவர்களின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

 

 HC ordered to protect bodies for a further 4 days

 

ஆனால் தகவல் கொடுத்து அடையாளம் பார்க்க அழைக்கப்பட்டாலும் உறவினர்கள் அடையாளம் பார்க்கும் முன்பே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகும் சடலங்களை பார்க்க போலீசார் அனுமதிக்கவில்லை என்றும், எனவே சடலங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் உறவினர்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி சடலங்களைப் உறவினர்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் 4 ந் தேதி வரை சடலங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் கண்ணன் என்கிற கார்த்திக்கின் அண்ணன் முருகேசனிடம் காட்டப்பட்ட சடலத்தைப் பார்த்து அந்த சடலத்தில் கண்கள் இல்லை, முகம் சிதைந்துள்ளது அதனால் இது என் தம்பி தானா என்ற சந்தேகம் எழுகிறது அதனால் சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட படங்களை காட்டினால் அடையாளம் பார்க்கலாம் என்று கூறினார். ஆனால் புகைப்படங்களை முருகேசனிடம் காட்ட விரும்பாத போலீசார் இதற்கு முன்பு கைதானபோது எடுக்கப்பட்ட கைரேகை பதிவுகளை வைத்து சரி பார்த்த பிறகுதான் அது கண்ணன் என்கிற கார்த்திக் உடல் என்பதை உறுதி செய்துவிட்டதாக முருகேசனுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் மோதல் நடக்கும் போதும் அதன் பிறகும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிய கேரளா உயர்நீதிமன்றத்தை உறவினர்கள் நாடிய நிலையில் இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.விசாரணையில் மேலும் 4 நாட்கள் வரை உடலை பாதுகாக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

எங்களுக்கான சந்தேகங்கள் தீர்க்கப்பட்ட பிறகே சடலங்களை வாங்குவோம் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கேரள போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.