Skip to main content

கஜா கரையை கடந்தும் குறையாத கடல் சீற்றம்

Published on 16/11/2018 | Edited on 17/11/2018
c

 

கடலூர் மாவட்டத்தில் வியாழன் நள்ளிரவு  பல்வேறு பகுதிகளில் கஜா புயலின் தாக்கத்தால் பலத்த மழை கொட்டியது. கஜா புயல்  முன்தினம் நாகப்பட்டினம்  வேதாரண்யம் பகுதியில் கரையை கடந்தது.

 

  இதனால் கடலூர் மாவட்டத்தில் வியாழன் நள்ளிரவு பலத்த சத்தத்துடன் காற்று வீசியது. சில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தது. சில இடங்களில் மரங்கள் சாய்தன. கஜா புயலையொட்டி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், வடலூர் நெய்வேலி, காட்டு மன்னார்கோவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் மழை கொட்டியது.

 

c

 

இந்நிலையில் கஜா புயலுக்கு கடலூர் மாவட்டத்தில் 3 பேர் பலியானார்கள். வேப்பூர் அருகே உள்ள மேல்மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அரவது மனைவி அய்யம்மாள்(32) இவர்கள் குடிசை வீட்டில் தூங்கிகொண்டிருந்தனர்.

 

நள்ளிரவு நேரத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அய்யம்மாள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

குறிஞ்சிப்பாடி பெரு மாத்தூரான் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஆனந்த்(40), டிரைவர். இவர் நேற்று இரவு பலத்த மழை பெய்துக் கொண்டிருந்த போது வீட்டின் உள்ளே மழை நீர் வந்துவிடுமோ என்ற அச்சத்தில், தனது வீட்டின் அருகே உள்ள வடிகால் வாய்க்காலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது அவர் வீட்டின் அருகே  மின்சார பெட்டி இருந்தது. அதில் வயர் ஒன்று அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது. அதனை கவனிக்காமல் ஆனந்த் சாக்கடையை அடைப்பை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

 

அப்போது அறுந்து தொங்கிக்கொண்டிருந்த வயர் திடீரென்று ஆனந்த் மீது உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து ஆனந்த் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.

 

பண்ருட்டி அருகே நடுகுப்பத்தைச் சேர்ந்த ரங்கநாதன் இவர்  என்எல்சி ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிகிறார் அதிகாலையில் பணிக்கு செல்லும்போது சாலையில் விழுந்து கிடந்த மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர்கள் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்ட மீனவ கிராமங்களில் படகுகளை பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்தி வைத்ததால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

 

சாலையில் விழுந்த மரங்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டது. மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட முகாம்களில் சுமார் 5 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது.

 ஆனால் நெய்வேலி சுரங்க நீர் வினாடிக்கு 2ஆயிரம் கன அடி  வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் வாலாஜா  ஏரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து பரவனாறு வழியாக பெருமாள் ஏரிக்கு  2 ஆயிரம் கன அடியும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் பெருமாள் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 6 அடியாக உள்ளது. இதன் முழு கொள்ளளவு 6.5 அடியாகும். வாலாஜா ஏரியில்  பொதுப்பணித்துறை அதிகாரிகள் முகாம் இட்டு  இதை கண்காணித்து வருகின்றனர். பரங்கிப்பேட்டை அருகே  சாமியார்பேட்டையில் மீனவர்கள் வலை உலர்த்தும் கூடத்தின் மேற்கூறை தகடுகள் காற்றில் விழந்தன. பரங்கிப்பேட்டை படற்கரை பகுதியில் கடல்சீற்றம் வெள்ளிக்கிழமை மாலை சீற்றத்துடன் இருந்தது.

 

இந்தநிலையில் வியாழன் இரவு வடக்குத்து பகுதியில் 146 மிமீயும், குறிஞ்சிப்பாடியில் 128மிமீயும், விருத்தாசலத்தில் 118மிமீயும், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 62.80மிமீயும், பரங்கிப்பேட்டையில் 62மிமீயும், சிதம்பரத்தில் 54.10மிமீயும், புவனகிரியில் 51மிமீயும், காட்டுமன்னார்கோவிலில் 40மிமீயும் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் நெய்வேலி அருகே உள்ள வடக்குத்தில்  அதிக அளவில் மழை பெய்துள்ளது. கிள்ளை அருகே சிங்ககாரகுப்பம் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொக்ளின் இயந்திரம் மூலம் வடியசெய்தனர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.