Skip to main content

''முழுக்க நனைஞ்சாச்சி, இதுக்கு மேல எதுக்கு முக்காடு; 307 போடுங்க'' - பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் பேட்டி

Published on 17/04/2023 | Edited on 17/04/2023

 

 "Fully soaked, why wear a veil over this? Put 307" - Victims' advocate interviewed

 

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில் வரப்பெற்றுள்ள புகார்கள் குறித்தும் விரிவான விசாரணை மேற்கொள்ள அரசு முதன்மைச் செயலாளர் அமுதாவை உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. ஒரு மாத காலத்திற்குள் தமது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அதில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அரசு முதன்மைச் செயலாளர் அமுதா விசாரணையைத் துவங்கியுள்ளார். 

 

தற்பொழுது இரண்டாம் கட்ட விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்திய தண்டனைச் சட்டம் 326-ல் பல்வீர் சிங் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆயுதத்தை பயன்படுத்தி கொடுங்காயம் ஏற்படுத்துதல், சித்திரவதை செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கான இந்திய தண்டனைச் சட்டத்தின் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வீர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்தவர்களின் வழக்கறிஞர் மகாராஜன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் மூன்று நிமிஷம் நசுக்கி இருக்கிறார். அவனால் மூச்சு விட முடியவில்லை. கீழே விழுந்துள்ளான். கீழே விழுந்து அவன் மூச்சு விட்ட பிறகு மீண்டும் நசுக்கி இருக்கிறார். அப்படி என்றால் கொல்ல வேண்டும் என்ற எண்ணம்தான் அவருக்கு இருந்திருக்கிறது. இதற்கு 307 தானே போட வேண்டும். இன்னும் இரண்டு நிமிடங்கள் நசுக்கி இருந்தால் அவன் இறந்திருப்பான். இதுவரைக்கும் அவனால் நடக்க முடியவில்லை. அதேபோல் மாரியப்பன் நடந்து கொண்டே இருக்கிறான் உட்கார முடியவில்லை. எந்த அளவிற்கு கொடுமை நடந்து இருக்கிறது என்று பாருங்கள்.

 

அருண் என்பவரின் அப்பா இபி ஆபிசர். சப்-கலெக்டரும் ஏ.எஸ்.பியும் ஒன்றாக பாபநாசம் மலைமேல் போவார்களாம். அவர்கள் இருவரும் அதிகார தொனியில் இவரை கதவை திறக்கச் சொல்வது, அணையை சுற்றி காண்பிக்க சொல்வது. இபியில் வேலை பார்ப்பதால் வாராவாரம் இதே கூத்துதான் நடந்திருக்கிறது. அவரது மகனை அடிக்கும் பொழுது இவர் வெளியே நின்று இருக்கிறார். சார், அது என்னுடைய மகன் என்ற பிறகு தான் பல்லை பிடுங்கி இருக்கிறார்கள். இதில் சப்-கலெக்டரையே விசாரணை அதிகாரியாக போட்டு இருக்காங்க பாருங்க.. அதுதான் ஜனநாயகக் கேலிக்கூத்து.

 

முதல் கட்டமாக இப்பொழுதுதான் உருப்படியான நடவடிக்கையை அரசு எடுத்து இருக்கிறது. முழுக்க நனைஞ்சாச்சு இதுக்கு மேல எதுக்கு முக்காடு. 307 போட்டுவிட வேண்டியதுதானே. மழுப்பலான விஷயங்கள்தான் தற்பொழுது வரை தொடர்ந்து வருகிறது. சப்-கலெக்டரை விசாரணை அதிகாரியாக போடுவது. நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் 25 நாள் கழித்து அமுதா ஐ.ஏ.எஸ்ஸை கொண்டு வருவது. அவர்கள் விசாரணை தொடங்கிய நேரத்தில் எஃப்.ஐ.ஆர் போடுவது. முதலிலேயே எஃப்.ஐ.ஆர் போட்டிருந்தார்கள் என்றால் இந்த கலவரங்கள் தேவையே கிடையாது. இப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் பிரிவுகள் முழுமையாக நாங்கள் கொடுத்த புகார் படி பூர்த்தி செய்யப்படவில்லை. நாங்கள் கொடுத்த புகாரின் படி 307 சேர்த்து போடப்பட்டிருக்க வேண்டும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.