Skip to main content

பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய அரசுப் பள்ளி ஆசிரியர் கைது! 

Published on 29/06/2022 | Edited on 29/06/2022

 

Government school teacher arrested

 

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள  அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500 மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். அப்பள்ளியில் வேதியியல் பாடப்பிரிவு ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஸ்ரீதர்(44). இவர், தன்னிடம் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவிகளிடம் வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக உரையாடியதாகவும், செல்போனில் ஆபாசமாகப் பேசியதாகவும், மாலை நேர வகுப்புகளில் அத்துமீறியதாகவும், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் மாணவிகளின் பெற்றோர்கள் கடந்த 10  தினங்களுக்கு முன் சென்னை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிற்குப் புகார் அளித்திருந்தனர்.

 

வேதியியல் ஆசிரியர் ஸ்ரீதரால் பாதிக்கப்பட்ட 2 மாணவிகள், ஸ்ரீதரின் பாலியல் தொல்லை தொடர்பான ஆடியோ, வாட்ஸ் அப் சாட் உள்ளிட்ட ஆதாரங்களுடன் குழந்தை நலக் குழுவிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, குழந்தை நல அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பள்ளிக்கு விசாரணைக்கு வந்த குழந்தைகள் நலக்குழு அப்படியே இவ்வழக்கைக் கிடப்பில் போட்டுள்ளது.

 

இது தொடர்பான ஆடியோக்கள் மற்றும் ஆபாச வாட்சப் சாட் போன்றவற்றை சமூக வலைத்தளங்களில் மூலமாக வைரலான நிலையில் மீண்டும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் விசாரணையைத் துவக்கினர். விசாரணையில் கடந்த கல்வி ஆண்டில் சில மாதங்கள் ஆன்லைன் வகுப்பு நடந்து வந்தபோது ஆசிரியர் ஸ்ரீதர் மாணவிகளுடன் வகுப்பு எடுக்கும் நேரத்தில் பேசி வந்ததும், தனது அத்துமீறலை அறியாமையால் அனுமதித்த ஒரு சில மாணவிகளை மட்டும் குறிவைத்து கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் அந்த வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் மாணவிகளின் நேரடி விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

 

இதற்கிடையில் நேரடி வகுப்புகள் தொடங்கிய பிறகு சில மாணவிகளுடன் ஆசிரியர் ஸ்ரீதர் வெளியில் செல்வதும், வகுப்பு நேரம் முடிந்த பிறகு பள்ளி வகுப்பறையிலேயே அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவ/மாணவிகளுக்கான நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளராக இருந்ததும் அதனைப் பயன்படுத்தியும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மாணவிகளை வைத்து அவர்களுடன் படிக்கும் மற்ற மாணவிகளுக்கு ஸ்ரீதர் பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்ததும் தெரியவந்தது. 

 

இந்த நிலையில் பள்ளி மாணவிகளுடன் ஆசிரியர் ஸ்ரீதர் உரையாடிய வாட்ஸ் அப் சாட்டுகள் மற்றும் போனில் பேசிய உரையாடல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து ஆசிரியர் ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் இன்று திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

புகாரின் பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர்  போலீசார் போக்சோ மற்றும் தொழில்நுட்ப தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் ஸ்ரீதரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக பள்ளி முன்பு கூடிய முன்னாள் மாணவிகள் இருதரப்பினர் ஆசிரியர்  ஸ்ரீதருக்கு ஆதரவாகவும் எதிராகவும் மாறி மாறி பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

ஸ்ரீதரும் அவரது மனைவியும் மாணவிகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளதாகவும், ஸ்ரீதரின் செல்போனை ஹேக் செய்து இது போன்ற ஆபாச குறுந்தகவல்களை வேறு யாரோ அனுப்பி விட்டதாகவும் அந்த முன்னாள் மாணவிகள் சிலர் சொல்லிவருகிறார்கள்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.