Skip to main content

கடலுக்கு கிளம்பிய மீனவர்கள்... தடுத்து நிறுத்திய அரசு அதிகாரிகள்!

Published on 26/07/2021 | Edited on 26/07/2021

 

Fishermen who went to sea ... Government officials detained!

 

நாகை நம்பியார் நகரில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி கடலுக்குச் சென்ற மீனவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அரசால் தடை செய்யப்பட்டுள்ள சுருக்குமடி, இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்குமாறு சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள ஒருபிரிவு மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திவருகின்றனர். அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது, அப்படி அனுமதித்தால் மீன்வளம் அழிந்துவிடும் என மற்றொரு பிரிவு மீனவர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பிவருகின்றனர்.

 

இந்நிலையில், இன்று (26.07.2021) காலை நாகை நம்பியார் நகர் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 8 படகுகளில் சுருக்குமடி வலைளை ஏற்றி கடலுக்குச் செல்ல தயாராகிவந்தனர். இதுகுறித்து தகவலறிந்து நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கு வந்த மீன்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், மீனவர்களைக் கடலுக்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் மீனவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிரச்சனை பெரிதாகும் நிலையில், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ‘சுருக்குமடி வலைகளை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேரடியாகவும், 5000 மேற்பட்ட மீனவர்கள் மறைமுகமாகவும் இருக்கிறோம். எங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கிவிட்டது. எனவே சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும்’ என  மீனவர்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். 

 

Fishermen who went to sea ... Government officials detained!

 

இரண்டு நாட்களுக்குள் அரசிடம் பேசி முடிவெடுப்பதாக அதிகாரிகள் கூறினர். அதனால் கடலுக்குச் செல்ல ஆயத்தமாகியிருந்த ஏராளமான நம்பியார் நகர் மீனவர்கள் கடற்கரையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் நம்பியார் நகர் கடற்கரை பகுதியில் தொடர்ந்து நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு அதிகரித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.