Skip to main content

நான்தாங்க அது... கலெக்டரின் அறிவிப்பால் கமெடியான கட்சி தலைவர்!

Published on 15/09/2020 | Edited on 15/09/2020
File a lawsuit against this person ... Comedian party leader by Collector's announcement!

 

 

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமையன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்று வந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தங்களது கோரிக்கைகளை கலெக்டரை சந்தித்து மனுவாக கொடுத்து வருவார்கள்.

 

இந்தநிலையில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுமக்கள் கலெக்டரை நேரடியாக சந்தித்து மனு கொடுக்காமல் அதற்கு பதிலாக கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில்  தங்களது மனுக்களை போட்டு விட்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும், முகத்தில் மாஸ்க் அணிந்து வரவேண்டும், முதியவர்கள் குழந்தைகள் வரக்கூடாது போன்ற வழிமுறைகள் வைக்கப்பட்டு இருந்தது.

 

இதன்படி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அங்குள்ள புகார் பெட்டியில் மனுக்களை போட்டுவிட்டு சென்றனர். நேற்று திங்கட்கிழமை என்பதால் பொதுமக்கள் சிலர் தங்களது கோரிக்கைகளை மனுவாக புகார் பெட்டியில் போட்டு விட்டு சென்றனர். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையையடுத்த கருக்குபாளையம், பொன்னாங்காடு காலனி பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க கோரியும், அடிப்படை வசதி செய்ய கோரியும் மனு கொடுக்க வந்தனர்.

 

இந்த மக்களில் பலர் முக கவசம் அணியாமலும் தனிமனித  இடைவெளியையும் பின்பற்றவில்லை. மேலும் அங்கு முதியவர்களும் நின்று கொண்டிருந்தனர். இவர்கள் எல்லோரையும் அழைத்து வந்தது அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற அமைப்பின் மாநில செயலாளர் சின்னசாமி என்பவர். அந்த நேரத்தில் மாவட்ட கலெக்டர் கதிரவன் தனது வீட்டிலிருந்து கலெக்டர் அலுவலத்திற்கு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது நுழைவாயில் அருகே இந்த மக்கள் நின்றுகொண்டிருப்பதை பார்த்து உடனடியாக தனது காரை நிறுத்தி கீழே இறங்கி வந்த கலெக்டர் கதிரவன், அங்கிருந்த பொதுமக்களிடம் எதற்காக வந்துள்ளீர்கள் என கேட்டார்.

 

அந்த மக்கள் வீட்டுமனை பட்டா, அடிப்படை வசதிகள் என கூற, அது சரி நீங்கள் எல்லோரும் முக கவசங்கள் அணியாமல் இருப்பதும், இடைவெளி இல்லாமல் கூட்டமாக நிற்பதும் தவறு. இப்போது நோய் தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் இவ்வாறு வந்திருப்பது தவறு என அவர்களை  எச்சரித்து அறிவுரை கூறியதோடு "உங்களையெல்லாம் யார் இங்கு இப்படி கூட்டி வந்தது?" என கேட்க "ஐயா நான்தாங்க... அண்ணா, புரட்சித் தலைவர், அம்மா திராவிட முன்னேற்ற கழக மாநில செயலாளர். என் பெயர் சின்னசாமிங்க" என ஒருவர் கூற "ஓ.. அப்படியொரு கட்சியா?" என கூறியவாரே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை அழைத்து "இதோ இந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யுங்க..'' என உத்தரவிட்டார் கலெக்டர் கதிரவன்.

"எனது தலைமையில் வந்தால் உங்க பிரச்சனை தீரும் என மக்களை நம்ப வைத்து அழைத்து வந்த அ.பு.அ.தி.மு.க. என்ற லெட்டர் பேடு கட்சி தலைவர் நடிகர் வடிவேலு பட காமடி போல் வழக்கில் மாட்டியதும், பிறகு அவர் போலீசிடம் கெஞ்சியதும் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பும், சிரிப்பை அடக்க முடியாத நிகழ்வாக இருந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.