Published on 24/08/2018 | Edited on 25/08/2018

கேரளாவில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்திலிருந்து அனுப்பப்படும் நிவாரணப் பொருட்கள் தொடர்ந்து சென்று கொண்டு உள்ளது. ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் அதன் மகளிர் அணியினர் சேகரித்த அரிசி, சர்க்கரை, மற்றும் பெட்சிட், போர்வைகள், துண்டுகள் மேலும் மருந்து பொருட்கள் என 20 லட்சம் மதிப்பிலான நிவாரன பொருட்கள் ஈரோட்டிலிருந்து அனுப்பப்பட்டது.
