தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்திய அளவில் கரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
![eps led consultation meeting ... important announcements likely to come!](http://image.nakkheeran.in/cdn/farfuture/aR5dqwI4T7TVCCT21G7vg4NgJBqEVllEzb9nTBd3KK8/1584618797/sites/default/files/inline-images/frgrtrttrt.jpg)
ஏற்கனவே மூன்றுமுறை கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று கூட்டத்தின் முடிவில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடப்பட்டது. போன முறை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் தமிழகத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு மார்ச் 31 ஆம் தேதி வரை செயல்படாது என தெரிவித்திருந்தார் எடப்பாடி.
இந்நிலையில் தற்பொழுது நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் எடப்பாடி பழனிசாமி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார், அதேபோல் நாளை காணொளி காட்சி மூலம் மோடி அனைத்து மாநில முதல்வர்கள் உடனும் ஆலோசனை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடக்கத்தக்கது.