Skip to main content

நக்கீரன் செய்தி எதிரொலி.. தொடர் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை நேரில் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி...

Published on 06/02/2021 | Edited on 06/02/2021

 

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்றுநர்கள் சங்கத்தினர், தங்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி சென்னை மாநிலத் திட்ட இயக்க வளாகத்தில் (டி.பி.ஐ) தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர். தொடர்ந்து இன்று (06.02.2021) கண்களில் கருப்புத் துணி கட்டியும், மண்டியிட்டும், 9வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

நேற்று இதுகுறித்து நக்கீரனிடம் பேசிய அச்சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கணபதி, அவர்களின் கோரிக்கையையும் வேதனையையும் வெளிபடுத்தினார். மேலும் அரசுத் தரப்பில் இருந்து யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும், எதிர்கட்சித் தலைவரிடத்திலும் மனு கொடுத்துள்ளோம் எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இன்று தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்றுநர்கள் சங்கத்தினர் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார். மேலும், தமிழக அரசு இவர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்கிட குரல் கொடுப்போம் என்று தெரிவித்தார். இந்தப் போராட்டத்தில் இன்று ஒரு ஆசிரியை மயக்கம் அடைந்தார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பம்’ - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

Published on 05/06/2024 | Edited on 05/06/2024
Application for talen Test Directorate of Government Examinations 

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு ஜூலை மாதம் நடக்க இருப்பதை அடுத்து, பள்ளி மாணவர்கள் ஜூன் 11 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2024 - 2025 ஆல் கல்லியாண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு 21.07.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்று தற்போது 2024 - 2025 ஆம் ஆண்டில் பதிணென்றாம் வகுப்பினை அரசுப் பள்ளிகளில் பயிலும் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். 

Application for talen Test Directorate of Government Examinations 

தேர்வில் 1000 மானாக்கர்கள் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 500 மாணவர்கள் + 500 மாணவியர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூபாய் 10 ஆயிரம் (மாதம் ரூ.1000/ வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும்) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமூகஅறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு இருதாள்களாக நடத்தப்பெறும் முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும்.

இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும். முதல் தாள் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையிலும் இரண்டாம் தாள் பிற்பகல் 02.00 மணி முதல் 04.00 வரையிலும் நடைபெறும். www.dge.in.gov.in இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை 11.06.2024 முதல் 26.06.2024 பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேர்வு கட்டணம் ரூ.50 (ரூபாய் ஐம்பது மட்டும்) சேர்த்து 26.06.2024ற்குள் மாணவர் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்கவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

போராட்டம் நடத்திய ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கைது!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Jacto jio organizations issue

சென்னை டிபிஐ வளாகம் முன்பு போராட்டம் நடத்திய ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்தக்கோரியும், அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை டிபிஐ வளாகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்து இன்று காலை 10 மணி முதல் அங்கு குவியத் தொடங்கினர். இருப்பினும் காவல்துறை சார்பில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

இருப்பினும் காவல்துறையின் அறிவிப்பையும் மீறி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் டிபிஐ வளாகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.