Skip to main content

வரதட்சனை கொடுமை! பெண்ணின் கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை!!

Published on 30/12/2021 | Edited on 30/12/2021

 

Dowry horrible! Husband jailed for 10 years!

 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வி.எஸ்.பி. நகரைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் வினோத்குமார்(30). எலக்ட்ரீசியனான இவருக்கும் குறிஞ்சிப்பாடி அடுத்த கல்குணம்  கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் சூர்யா(21) என்பவருக்கும் கடந்த 30.01.2007 அன்று திருமணம் நடைபெற்றது.

 

திருமணத்தின்போது சூர்யாவின் பெற்றோர் 20 சவரன் நகை, ரூபாய் 2.50 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்துள்ளனர். திருமணமாகி ஆறு மாதத்தில் வினோத்குமாரின் சகோதரி வித்யா வீடுகட்டும் செலவிற்காக குடும்பத்தினர் சூர்யாவிற்கு தெரியாமல் அவரது நகைகளை அடமானம் வைத்தனர். இதுகுறித்து சூர்யா கேட்டதால் கணவர் வினோத்குமார், மாமனார் பழனி, மாமியார் ராஜேஸ்வரி, கணவரின் சகோதரி ஆகியோர் சூர்யாவை தாக்கினர். மேலும் இந்த விரோதத்தில் சூர்யாவிற்கு குழந்தை இல்லை என திட்டி வாழைப்பழத்தில் 'புள்ளைபூச்சி'யை வைத்து வலுக்கட்டாயமாக கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த சூர்யா 06.04.2018 அன்று கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்று,  பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். பின்னர்  சூர்யாவின் பெற்றோர் வீட்டில் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி வினோத்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சூர்யாவை கொடுமைப்படுத்தியுள்ளனர். அதையடுத்து தனது வீட்டிற்கு சென்று 4 சவரன் நகை வாங்கி வந்து கொடுத்த பிறகும் சூர்யாவை துன்புறுத்தி வீட்டை விட்டு துரத்தி உள்ளனர். தொடர்ந்து கொடுமைகள் அதிகரித்ததால் 09.08.2018 அன்று சூர்யா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் சூர்யா- வினோத்குமாரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

 

ஆனாலும் கொடுமை தொடர்ந்ததால் விரக்தியடைந்த சூர்யா 14.08.2018 அன்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதையடுத்து சூர்யாவின் அண்ணன் சிவக்குமார் தனது தங்கை சாவில் சந்தேகம் இருப்பதாக பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

Dowry horrible! Husband jailed for 10 years!

 

விசாரணையில் வரதட்சணை கொடுமையால் தான் சூர்யா தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது. அதையடுத்து சூர்யாவின் கணவர் வினோத்குமார், அவரது தந்தை பழனி(50), தாய் ராஜேஸ்வரி(45, சகோதரி வித்யா(36) ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.


அவர்கள் மீது கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசு வழக்கறிஞர் செல்வபிரியா ஆஜராகி வழக்கு நடத்தினார். சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி பாலகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், சூர்யாவின் கணவர் வினோத்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பழனி, ராஜேஸ்வரிக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், வித்யாவுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அத்துடன் 4 பேருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆடு திருட்டில் முன்விரோதம்; அதிமுக நிர்வாகி கொலையில் திடுக்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Antecedent in goat theft; AIADMK official shocked by murder

                           கொலை செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி  புஷ்பநாதன்   

கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதன் என்பவர் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உறவினர்கள், அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளை புஷ்பநாதனின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. முன் விரோதம் காரணமாக புஷ்பநாதனை மூன்று பேரும் சேர்ந்து கொலை செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

ஆலை காலனி பகுதியை சேர்ந்த நேதாஜி, அதே பகுதியைச் சேர்ந்த அஜய் மற்றும் சந்தோஷ் ஆகிய மூன்று பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மூவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவாளர்கள் என கூறப்படும் நிலையில், ஆடுகளை திருடி, அந்த பகுதியில் கசாப்பு கடை நடத்தி வந்த அதிமுக நிர்வாகி புஷ்பநாதனுக்கு விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. குறைந்த விலைக்கு ஆடுகளை தன்னுடைய கசாப்பு கடைக்காக வாங்கி வந்த புஷ்பநாதனிடம் திருடப்பட்டு வந்த ஆடுகளை தொடர்ந்து விற்று வந்தனர். இந்நிலையில் நேதாஜி, சந்தோஷ் மற்றும் அஜய் ஆகிய மூன்று பேரும் தேவனாம்பட்டினத்திற்கு காரில் சென்று திமுக பிரமுகர் ஒருவரின் வீட்டில் எட்டு ஆடுகளை திருடியுள்ளனர். இது குறித்த வழக்கில் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Antecedent in goat theft; AIADMK official shocked by murder

                            கைது செய்யப்பட்ட சந்தோஷ், அஜய், நேதாஜி 

ஆடு திருட அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்திருந்தனர். இந்நிலையில் தங்களிடமிருந்து ஆடுகளை வாங்கிய புஷ்பநாதன் தங்கள் 3 பேரையும் ஜாமீன் எடுப்பார், வாகனத்தையும் போலீசிடம் இருந்து மீட்டர் தருவார் என மூன்று பேரும் நினைத்திருந்தனர். ஆனால் புஷ்பநாதன் அவ்வாறு செய்யாததால் புஷ்பநாதனுக்கும் மூன்று இளைஞர்களுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வந்தவர்கள் இது குறித்து புஷ்பநாதனை நேரில் சந்தித்து கேட்டுள்ளனர். இதில் தகராறு ஏற்பட்ட நிலையில் மது போதையிலிருந்த மூன்று பேரும் புஷ்பநாதனை வெட்டி கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது

Next Story

முன்னாள் கவுன்சிலர் கொலை; கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் சூறை!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Cuddalore Vandipalayam Former ADMK councilor Pushparajan incident

கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதன் என்பவர் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உறவினர்கள், அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக நேதாஜி, சந்தோஷ் மற்றும் அஜய் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளை புஷ்பநாதனின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. முன் விரோதம் காரணமாக புஷ்பநாதனை மூன்று பேரும் சேர்ந்து கொலை செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் அதிமுக மாவட்டப் பிரதிநிதியும் முன்னாள் கவுன்சிலருமான புஷ்பநாதன் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், மறைந்த புஷ்பநாதன் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். இந்த ஆட்சியில் பொதுமக்கள், காவல்துறையினர், அரசியல் கட்சியினர் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை. புஷ்பநாதனை படுகொலை செய்தோரைத் துரிதமாகக் கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.