Published on 25/02/2020 | Edited on 25/02/2020
விழுப்புரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்பு வார்டுகள் எல்லை மறுவரையறை தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்திலிருந்து விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் முனைவர் க.பொன்முடி எம்.எல்.ஏ வெளிநடப்பு செய்தார்.
பின்னர் கருத்து கேட்பு கூட்டம் கருத்துத்திணிப்பு கூட்டமாக நடைபெறுகிறது. பெயரளவில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. எங்களின் கருத்தைக் கேட்டு எந்த நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.