Skip to main content

பொது இடத்தில் வீசப்பட்ட 28 கள்ளத் துப்பாக்கிகள்! போலீசார் அதிரடி விசாரணை!

Published on 14/10/2020 | Edited on 14/10/2020

 

dindigul incident police investigation

 

 

திண்டுக்கல் அருகே சிறுமலை பகுதியில் 28 கள்ளத் துப்பாக்கிகளை வீசிவிட்டு சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான சிறுமலையில் கள்ளத் துப்பாக்கிகள் புழக்கம் அதிகமாக இருப்பதாக திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. முத்துசாமிக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கடந்த ஒரு மாதமாக போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து கள்ளத் துப்பாக்கி தயாரிப்பவர்கள் சிறுமலை பகுதிகளில் துப்பாக்கிகளை வீசிவிட்டு சென்றனர். 

 

இதுவரை 25க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை சாணார்பட்டி போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல்லில் எஸ்.பி ரவளி பிரியா  உத்தரவின்பேரில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து போலீசார் மற்றும் திண்டுக்கல் தாலுகா போலீசார் ஐந்து குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு குழுவும் 50க்கும் மேற்பட்ட போலீஸார் வீதம் சிறுமலை கிராமத்தில் வீடு வீடாக அதிரடி சோதனை நடத்தினர். 

 

இதில் கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. துப்பாக்கி வைத்திருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கள்ளத் துப்பாக்கி தயாரிப்பவர்கள் அவர்களிடம் இருந்து வாங்கி விற்பவர்கள் என 12க்கும் மேற்பட்டோரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். போலீசார் சோதனை எதிரொலியாக அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருப்பவர்கள் பொது இடத்தில் போட்டு விடுலாம் என கிராம நிர்வாகம் நேற்று முன்தினம் தண்டோரா மூலம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

 

அதைத்தொடர்ந்து வீடுகள் காட்டுப்பகுதிகளில் கள்ளத் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தவர்கள். நேற்று முன்தினம் இரவு சிறுமலை அருகே கடம்பன்குளம் கிராமத்தில் உள்ள ஒரு பொது இடத்தில் துப்பாக்கிகளை வீசிவிட்டு சென்றனர். தகவலறிந்து வந்த திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையிலான போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று அங்கிருந்த 28 கள்ளத் துப்பாக்கிகள் மற்றும் நான்கு பேரல்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இப்படி ஒரே இடத்தில் 28  கள்ளத் துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.