தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம், 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் 29-ந் தேதி முதல் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில், திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தனக்கு பேச வாய்ப்பு வழங்கும்படி சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் தனபால்,
’ஜெ.அன்பழகனை அவையில் வைத்துக்கொண்டு தினம், தினம் கஷ்டப்படுகிறேன்’. பேரவைக்கு தினமும் தாமதமாக வரும் ஜெ.அன்பழகன் வந்தவுடன் பேசுவதற்கு அனுமதி கோருகிறார், அனுமதிக்கவில்லை என்றால் வெளியில் சென்றுவிடுகிறார் என அவர் கூறினார்.
ஜெ.அன்பழகனை அவையில் வைத்துக்கொண்டு தினம், தினம் கஷ்டப்படுகிறேன்! - சபாநாயகர் புலம்பல்!
சார்ந்த செய்திகள்
Next Story
கனகராஜ் அண்ணனை கஸ்டடியில் எடுக்கிறது தனிப்படை!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மேல்விசாரணை நடைபெற்றுவருகிறது. இவ்வழக்கில் முக்கிய நபராக பார்க்கப்படும் கனகராஜ், மர்மமான முறையில் பலியானார். தற்போது, அது தொடர்பாக கனகராஜின் சகோதரர்கள் தனபால் மற்றும் ரமேஷ் ஆகிய இருவர்மீதும் சாட்சிகளை மறைத்தல், சாட்சிகளை அழித்தல், சாட்சி சொல்ல விடாமல் தடுத்தல் என 201, 211, 404 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, தனிப்படை போலீசார் சேலத்தில் வைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் கூடலூர் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்துவரும் கோத்தகிரி ஆய்வாளர் வேல்முருகன், உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இருவரையும் தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நேற்று முன்தினம் (27.10.2021) மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி சஞ்சய் பாபா, கனகராஜின் சகோதரர் தனபாலை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
Next Story
சென்னையில் ஜெ.அன்பழகன் படத்திறப்பு விழா... (படங்கள்)
சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. முன்னாள் செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் கடந்த 10.06.2019 அன்று உயிரிழந்தார்.
அவருக்கு சென்னை தென்மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பாக நேற்று படத்திறப்பு விழா நடைபெற்றது. இதில், இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மறைந்த ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.