Skip to main content

தீபத்திருவிழா – அண்ணாமலையாருக்கு மாலைப்போட குவிந்தது பக்தர்கள் கூட்டம்

Published on 13/11/2018 | Edited on 13/11/2018


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா தமிழக அளவில் பிரசித்திப்பெற்றது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுவை என தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இருந்து தீபத்திருவிழாவை காண திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வருவார்கள்.

 

THIRUVANNAMALAI


நாளை (14.11.2018)ந்தேதி விடியற்காலை 5 மணி முதல் 6.15 க்குள் தீபத்திருவிழாவுக்கான கொடியேற்றம் அண்ணாமலையார் கோயிலுக்குள் சந்நிதானத்துக்குள் உள்ள தெங்க கொடி மரத்தில் ஏற்றப்படவுள்ளது. அதன்பின் விழா தொடங்கும். தினமும் காலை மற்றும் இரவு என இரண்டு முறை சுவாமிகள் மாடவீதியில் வீதியுலா வரும். இதனை தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிப்பர்.


7 வது நாள் 20.11.2018 ந்தேதி மகாரதம் வீதியுலா நடைபெறவுள்ளது. இதனை காண 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என காவல்துறை கணக்கிட்டுள்ளது. 23.11.2018ந்தேதி விடியற்காலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2667 அடி உயரம்முள்ள மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும். இதனை காண 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருகை தருவார்கள்.

 

THIRUVANNAMALAI


இந்த தீபத்திருவிழாவின் 10 நாட்களும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சுவாமி ஊர்வலத்துடன் மாடவீதியுலா வருவார்கள், அதேப்போல் மகாதீபத்தன்று கிரிவலம் வருவது பக்தர்கள் வாடிக்கை. தீபத்திருவிழாவுக்காக அண்ணாமலையார் பக்தர்கள் மாலை அணிந்து கிரிவலம் வருவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாகியுள்ளது.

 


இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் நாளை 14.11.2018 ந்தேதி தொடங்கவுள்ள நிலையில் அண்ணாமலையாருக்காக மாலை அணிய தேவையான பொருட்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரடிவீதியில் உள்ள கடைகளில் குவிந்தனர். இதனால் தேரடிவீதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

Deepavathiruvai

 

இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலிஸார் வாகனபோக்குவரத்தை வேறு பாதையில் திருப்பிவிட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்தது. திருவண்ணாமலை நகரம்மே தீபத்திருவிழாவை முன்னிட்டு கலைக்கட்ட தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கது. மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் தீபத்திருவிழா குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதிகாரிகள் பக்தர்களுக்காக செய்துள்ள பணிகள், சரியாக செய்துள்ளார்களா என ஆட்சியர் கந்தசாமி அண்ணாமலையார் கோயில், கிரிவலப்பாதையில் ஆய்வுகள் மேற்கொண்டார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.