Skip to main content

ஊருக்குள் புகுந்த முதலை! பொதுமக்கள் பீதி!!

Published on 12/12/2018 | Edited on 12/12/2018

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிவாயம் கிராமத்தில் புதன்கிழமை காலை சாலையில் பெரிய முதலை ஒன்று படுத்திருந்தது.  இதனை பார்த்த அப்பகுதிமக்கள் பயந்து ஓடினர். 

 

இதனையறிந்த அந்த பகுதி இளைஞர்கள் இந்த முதலையின் தலை மீது சனல் சாக்கை தண்ணீரில் நனைத்து போட்டனர். பின்னர் முதலை வேறு எங்கும் செல்லாதவாறு தூரத்தில் இருந்து முதலை மீது கயிற்றை போட்டு ஒரு மரத்தில் கட்டிவிட்டனர். 

 

v

 

பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் கஜேந்திரன், புஷ்பராஜ் ஆகியவர் முதலை பிடிக்கும் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் உதவியுடன் அந்த முதலையை பிடித்து அருகில் உள்ள வக்கராமாரி  ஏரியில் விட்டனர்.  இந்த முதலை 10 அடி நீளமும் 100 கிலோ எடையும் உள்ளதாக கூறப்படுகிறது.

 

 

இதேபோன்று மழைகாலங்களில் அந்த ஏரியில் தண்ணீர் அதிகம் உள்ளபோது முதலைகள் ஊருக்குள் தொடர்ந்து வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது எனவே இப்பகுதியில் முதலை பண்ணை அமைத்து பாதுகாக்கவேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக அரசிடம் கோரிக்கை  வைத்து வருகிறார்கள்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

நீர் நிலைகளைப் பாதுகாக்கக் குளத்தைத் தூர் வாரிய கிராம வளர்ச்சிக் குழுவினர்!

Published on 28/05/2024 | Edited on 28/05/2024
protect  water levels near Chidambaram,  village board of village development team will open pond

சிதம்பரம் அருகே உள்ள பெரியகுமட்டி ஊராட்சி பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது. இந்த ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி மன்ற தலைவராக மரகதம் உள்ளார். இந்த நிலையில் இந்த ஊராட்சியில் பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்வதற்கு இளைஞர்கள், இளம்பெண்களைக் கொண்ட கிராம வளர்ச்சிக்குழு என்று ஒரு குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் 25 பேர் உறுப்பினராக உள்ளனர். இதன் தலைவராக ஞானகுருவும், செயலாளராக அன்புவும், பொருளாளராக சுதாவும் உள்ளனர். இக்குழுவினர் ஊராட்சியில் உள்ள 7 குளங்களை அரசை எதிர்பார்க்காமல் தாங்களே தூர்வாருவது என்றும் இதன் மூலம் மழை காலத்தில் தண்ணீர் தேங்கி கிராமத்தின் நிலத்தடி நீர் மட்டம் உயரும் மற்றும் ஊராட்சியில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று முடிவு செய்தனர்.

அதனடிப்படையில் ஊரின் மேலத்தெருவில் உள்ள நத்தவனம் குளத்தை ஊராட்சி மன்ற தலைவர் மரகதம் மற்றும் கிராம வளர்ச்சிக்குழுவினர்  மண்வெட்டி, கடப்பாறைக் கொண்டு மண்ணை அள்ள பாண்டுடன் களமிறங்கினர். யாரையும் எதிர்பார்த்து நிற்காமல் குளத்தில் இறங்கி தூர் வாரும் பணியில் ஈடுபட்டனர். குளத்தில் இருந்து குப்பைகளை அகற்றினர். அதனைத் தொடர்ந்து மண்ணை வெட்டி கரைப்பகுதியில் போடும் பணியில் ஈடுபட்டுனர்.

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர்  மரகதம் கூறுகையில் எங்களது  ஊராட்சியில் கிராம வளர்ச்சி குழு என்று உருவாக்கி, கிராமத்தில்  பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தற்போது ஊராட்சியில் உள்ள குளங்களை தூர் வார முடிவு செய்து கிராம மக்களின் ஆதரவுடன்  நந்தவனம் குளத்தைத் தூர் வார ஆரம்பித்துள்ளோம். இதனைத் தொடர்ந்து அனைத்து குளத்தையும் தூர் வாருவோம். நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இதைச் செய்து வருகிறோம். இதன் மூலம் எங்கள் கிராமத்தின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பஞ்சம் இருக்காது என்றார்.

இது குறித்து  கிராம வளர்ச்சி குழுவினர் கூறுகையில்  நாங்கள்  தற்போது குளத்துக்கு பணத்தை எதிர்பார்க்காமல்  எங்களது உழைப்பை பயன்படுத்தி கிராம மக்கள் ஒன்று சேர்ந்து குளத்தை தூர் வாரி வருகின்றனர்.  இது போன்ற விழிப்புணர்வு மற்ற  கிராம மக்களுக்கும் வர வேண்டும், பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகளில் ஒன்று குடிநீராகும்.  கிராமத்தல் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்கவே முதல் கட்டமாக இந்தப் பணியை கையில் எடுத்துள்ளோம். இது போல பல்வேறு நலப்பணிகளை செய்து எங்கள் கிராமத்தை முன்மாதிரி கிராமமாக உருவாக்குவோம், மாவட்ட நிர்வாகம் குளத்தைச் சுற்றி தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story

சி.பி.சி.எல். நிர்வாகத்தைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம்!

Published on 10/05/2024 | Edited on 10/05/2024
The hunger struggle continues to condemn the CPCL administration

நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடி என்ற கிராமத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல். (CPCL) அமைந்துள்ளது. இந்த நிறுவனம் 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கப் பணியை மேற்கொண்டுள்ளது. இதற்காக பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம், முட்டம், சிறுநங்கை உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் 620 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் சிபிசிஎல் நிறுவன விரிவாக்கப் பணிக்கான நில எடுப்பில் நிவாரணத் தொகை வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அதே சமயம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அளவீடு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. நாகை காவல் கண்கானிப்பாளர் அஸ்வின் தலைமையில் நாகை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட 800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

The hunger struggle continues to condemn the CPCL administration

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “பனங்குடி சி.பி.சி.எல். (CPCL) நில எடுப்பில் பாதிக்கப்பட்ட பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம் கிராம நில உரிமையாளர்கள், சாகுபடிதாரர்கள், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு மத்திய நில எடுப்பு சட்டம் 30/2013 - இன் படி வழங்க வேண்டிய R&R (மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பிட்டுத் இழப்பீட்டுத் தொகை) இழப்பீட்டுத் தொகையை நான்கு வருடங்களாக வழங்காமல் இருந்து வருவதை உடனடியாக வழங்கிட வேண்டும். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்கிய பின்னரே சி.பி.சி.எல்., ஐ.ஓ.சி.எல் (IOCL) நிறுவனம் நிலங்களை அளவீடு செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் துவங்க வேண்டும். மூன்று கிராமங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்குவதை உறுதி செய்திட வேண்டும்.

இந்த நில எடுப்பினால் பாதிக்கப்பட்ட முட்டம், சிறுநங்கை கிராமங்களின் விவசாய கூலித் தொழிலாளர் களையும் கணக்கெடுத்து, அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். பணங்குடி கிராமத்தில் சாகுபடிதாரர்கள், விவசாய கூலித் தொழிலாளர்கள் இவர்களின் கணக்கெடுப்பில் திட்டமிட்டே ஊழல் செய்யும் பனங்குடி கிராம நிர்வாக அலுவலர் சித்ரா என்பவர் மீது துறை ரீதியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும்” என முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.