Skip to main content

மனோஜ்,சயானை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு!

Published on 02/03/2019 | Edited on 02/03/2019
 court Order manoj shyaan kept in custody

 

கொடநாடு கொலை வழக்கில் வாலையார் மனோஜையும், சயானையும் தமிழக போலீசார் நேற்று கைது செய்துள்ள நிலையில் இன்று இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் மார்ச் 4 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சயான் மற்றும் மனோஜை கைது செய்ய வேண்டும் என கோத்தகிரி நீதிமன்றம் கொடுத்த உத்தரவை அடுத்து அவர்களை கைது செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது, அதை மீறி மனோஜையும், சயானையும் நேற்று தமிழக போலீசார் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள நெடுஜாலாகூடாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் இன்று உதகை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் இருவரையும்  வரும் மார்ச் 4 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீலகிரி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  

சார்ந்த செய்திகள்