Skip to main content

திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை...

Published on 08/01/2021 | Edited on 08/01/2021

 

Corona vaccine rehearsal at Trichy Government Hospital ...


கரோனோ தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி முதற்கட்டமாக தமிழகத்தில் கடந்த 2ஆம் தேதி ஐந்து இடங்களில் நடத்தப்பட்டது. இந்நிலையில், இன்று (08/01/2021) தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்வு நடத்தப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். 

 

அதன்படி, திருச்சி மாவட்டத்தில் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று நடத்தப்பட்ட ஒத்திகை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மருத்துவமனை முதல்வர் வனிதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் எட்வினா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

இதைத் தவிர மனப்பாறை அரசு மருத்துவமனை, இனாம் குளத்தூர், இராமலிங்க நகர் மற்றும் ஒரு தனியார் மருத்துவமனை என ஐந்து இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. ஒவ்வொரு இடத்திலும் 25 பணியாளர்களுக்கு இன்று தடுப்பூசி போடும் ஒத்திகை நிகழ்வு நடத்தப்பட்டது. 

 

சார்ந்த செய்திகள்