Skip to main content

தேனி மாவட்டத்தில் கரோனா பரிசோதனை படிவம் தட்டுப்பாடு!

Published on 19/01/2022 | Edited on 20/01/2022

 

 Corona test form shortage in Theni district!

 

தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் 3-வது அலை பரவல் தீவிரம் அடைந்துள்ளது. தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். நோய் அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சிகிச்சை பெறவும், பரிசோதனை செய்து கொள்ளவும் மக்கள் பலர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 

 

பரிசோதனை செய்யும் போது மாதிரியை சேகரிப்பதோடு பரிசோதனை செய்து கொள்பவரின் பெயர், முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களைப் பரிசோதனைக்கான படிவத்தில் பூர்த்தி செய்வது வழக்கம். இதற்குத் தேவையான படிவங்களை சுகாதாரத்துறையினர் ஏற்பாடு செய்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கொடுத்து வந்தனர்.

 

இந்நிலையில் மாவட்டத்தில் சில அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த பரிசோதனை படிவம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பரிசோதனை செய்து கொள்ள வரும் மக்களிடம், அங்கு கைவசம் இருக்கும் படிவத்தை கொடுத்து நகல் எடுத்து வருமாறு சுகாதாரத்துறையினர் அனுப்பி வைக்கின்றனர். பொதுமக்களும் நகல் எடுக்கும் கடைகளைத் தேடிச் சென்று நகல் எடுத்துக் கொடுத்து பரிசோதனை செய்து கொள்கின்றனர். தேனி நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கடந்த சில நாட்களாகப் படிவங்கள் தட்டுப்பாடு நிலவியது. 

 

நேற்று கரோனா பரிசோதனை செய்ய சென்ற மக்கள், படிவத்தை நகல் எடுக்க கடைகளுக்கு அனுப்பப் பட்டனர். ஆனால் தேனியில் நேற்று மின்தடை என்பதால் நகல் எடுக்க கடை, கடையாக அலைந்து திரியும் நிலைமைக்கு சிலர் தள்ளப்பட்டனர்.

 

இதுசம்பந்தமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் சிலரிடம் கேட்டபோது, 'கரோனா பரிசோதனை படிவம் தட்டுப்பாடு கடந்த ஐந்து நாட்களாக நிலவுகிறது. கைவசம் ஓரிரு படிவங்கள் தான் இருப்பதால் அதையே நகல் எடுத்து பயன்படுத்திக் கொள்கிறோம் என்றனர். படிவம் தட்டுப்பாடு காரணமாக அறிகுறிகளுடன் வருபவர்களையே நகல் எடுக்க அனுப்பி வைப்பதால் அவர்கள் மூலம் கடைக்காரர்கள் உள்பட மேலும் பலருக்கு கரோனா பரவும் அபாயம் உள்ளது. எனவே தட்டுப்பாடின்றி போதிய அளவில் படிவங்களை அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் மக்கள் மத்தியிலிருந்து வருகிறது''என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.

Next Story

மரத்தடியில் டி.டி.வி. தினகரனுக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்‌.!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
OPS waiting for tTV Dinakaran on under the tree

தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. வேட்பாளரான டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வில் நாராயணசாமி, நாம் தமிழக கட்சி சார்பில் மதன் மற்றும் சில கூட்டணி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் இருந்தாலும் கூட நான்கு முனை போட்டி தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று (27.03.2024) டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய மதியம் இரண்டு மணிக்கு மேல் வருவதாக இருந்தது. ஏற்கெனவே ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகனும் எனக்காக இந்த தொகுதியை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார்.

அதை தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்வதை பார்த்து வாழ்த்து கூற ஓ.பி.எஸ். முடிவு செய்து, தனது தொகுதியான ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 01.15 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட செயலாளர் சையது கானும் இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடியிலேயே நின்று கொண்டு அவர்கள் இண்டு பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது ஓ.பி.எஸ் வழக்கத்துக்கு மாறாக அதிமுக கரை வேட்டி இல்லாமல் பாடர் கரை போட்ட வேட்டி கட்டி இருந்தார். உடன் வந்த ஒருவர் ஓ.பி.எஸ்.உட்காருவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று ஒருசேர் எடுக்க முயன்றார். அப்பொழுது அங்குள்ள அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறி வெளியே சேர் கொண்டு போக கூடாது என்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து தான் ஓ.பி.எஸ்.ஸுடன் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து 02.14 மணி வரை அதாவது ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தனர். ஆனால், தமிழக முதல்வராக இரண்டு முறை ஓ.பி.எஸ். இருந்தும் கூட அதை எல்லாம் மறந்து விட்டு டி.டி.வி. தினகரன் வருகைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடி நிழலில் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார்.

OPS waiting for tTV Dinakaran on under the tree

அதைத்தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் பிரச்சார வேனில் 02.15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வந்த டிடிவியை ஓ.பி.எஸ். வரவேற்று சால்வை அணிவித்தார். ஆனால் டிடிவி தினகரன் ஓ.பி.ஆர். உள்பட சிலர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வந்தனர். அதுவரை ஓ.பி.எஸ். மரத்தடியிலேயே நின்று கொண்டிருப்பதை கண்டு அதன் அருகில் மக்கள் உட்காருவதற்காக இரும்புச் சேர் போட்டு இருப்பதை பார்த்த கட்சிக்காரர்கள் சிலர் அதை எடுத்து வந்து போட்டனர். அதில் ஓ.பி.எஸ். உடன் இரண்டு பேரும் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின் வந்த டி.டி.வி. தினகரனை மீண்டும் வாழ்த்தினார். அப்பொழுது டி.டி.வி. தினகரன் நீங்களும் வாங்கள் பேட்டி கொடுக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். ஆனால் டி.டி.வி. மட்டும்தான் பேட்டி கொடுத்தாரே தவிர அதன் அருகிலேயே ஓ.பி.எஸ். நின்று கொண்டே இருந்தார் அதன் பின் பிரச்சாரவேனில் டி.டி.வி. தினகரன்  ஏறும் வரை அருகிலேயே நின்று வழி அனுப்பி விட்டு தான் திரும்பி சென்றார்.