தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இவைகளில் மோசடியான நியமனங்கள் அதிகளவில் அதிகாரிகளின் பெரும் ஆதரவோடு ஆளும்கட்சி செய்வது அப்பட்டமாக வெளியாகி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்ட தலைநகரில் உள்ள மின்தொழிலாளர் கூட்டுறவு சங்க தேர்தலில் ஆளும்கட்சியான அதிமுக 2 இடத்திலும், திமுக 4 இடத்திலும், கம்யூனிஸ்ட்கள் 3 இடத்தில், மற்றவர்கள் 4 இடத்தில் என வெற்றி பெற்றுள்ளார்கள். ஆனால் இந்த வெற்றி பட்டியலை வெளியிடாமல் கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரிகள் ஒருநாள் இரவு முழுவதும் போக்குகாட்டினர். மின்தொழிலாளர்கள் தலைமை அலுவலகத்தில் அமர்ந்து போராட்டம் செய்ய அதன்பின்பே வெற்றி பெற்றவர்களின் உண்மையான பட்டியலை வெளியிட்டது.
போளுர் அருகேயுள்ள மண்டகொளத்தூரில் உள்ள கூட்டுறவு விவசாயிகள் கடன் சங்கத்திலும் தில்லு முள்ளு ஆளும் கட்சியினர் செய்ய அதிகாரிகள் அதற்கு துணை புரிந்தனர். திமுக, பாமக போன்ற கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்த அலுவலகத்தில் போராட்டம் செய்ய தற்போது தேர்தல் தள்ளி வைக்கப்படுவதாக ஏப்ரல் 4ந்தேதி அதிகாரிகள் வேறு வழியில்லாமல் அறிவித்தனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை ஒன்றியம், நல்லவன்பாளையம் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 11 இயக்குநர்கள். அதற்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 11 பேர் மனு செய்துள்ளனர். அந்த 11 பேர் மட்டும்மே தேர்தலில் நிற்பதால் தேர்தல் இல்லாமல் அப்படியே வெற்றி பெற்றதாக அறிவிக்கும் நிலையேவுள்ளது. அதிகாரபூர்வமான நிலையில் கடந்த 2ந்தேதி இரவு பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியல் கணக்குப்படி 8 பேர் அதிமுகவினர், 3 பேர் திமுகவினர்.
இதற்கிடையே 3 நாள் பொருத்து அந்த பட்டியலை ஆளும்கட்சிக்கு சாதகமாக மாற்ற முடிவு செய்துள்ளார்கள் என்கிற தகவல் வெளியாக நல்லவன்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு உட்பட்ட 10 கிராமங்களில் உள்ள திமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பட்டியல் வெளியாகி 3 நாள் ஆகிறது. அதன்பின் இப்போது ரகசியமாக கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள் ஆதரவுடன் பட்டியலை மாற்றி இயக்குநர்கள் 11 பேரும் அதிமுகவினராக இருப்பது போல் மாற்றவுள்ளார்கள் என்கிற தகவல் கிடைத்துள்ளது. இதுப்பற்றி நாங்கள் எங்கள் மா.செ வேலுவிடம் தகவல் தெரிவித்துள்ளோம் என்றார் திமுக பிரமுகர் ஒருவர்.
வேட்பாளர் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டு 3 நாட்களுக்கு பின் ஆளும்கட்சிக்கு சாதகமாக பட்டியல் மாற்றப்படுகிறதா என கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ரேணுகாம்பாளின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, அந்த எண்ணில் பேசிய அலுவலக கண்காணிப்பாளர், மேடம் பிஸி என்றவர் மாற்றும் திட்டம் எதுவும்மில்லை என்றார் நம்மிடம்.
கூட்டுறவு தேர்தல் –ஆளும் கட்சியினருக்காக வெற்றி பட்டியலை மாற்றும் அதிகாரிகள்!
சார்ந்த செய்திகள்
Next Story
பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்
மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.
பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.
Next Story
'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?
இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.