Skip to main content

தண்ணீர் ஓடும் வாய்க்காலில் சடலத்தை தூக்கி செல்லும் அவலம்!!!

Published on 18/11/2020 | Edited on 18/11/2020

 

cidambaram vadakudi village people requesting to make way to cremation ground

 

 

சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடி எனும் கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சுடுகாட்டிற்கு சரியான வழியில்லாததால் கடந்த பல ஆண்டுகளாக மழை காலங்களில் இறந்தவர்களின் உடலை தண்ணீரில் தூக்கி செல்லும் அவலநிலை நீடித்துவருகிறது.

 

இந்த நிலையில், நேற்று இந்த ஊரில் ராணி என்பவர் உயிரிழந்தார். அவரது உடலை சுமந்துசெல்ல சரியான வழி இல்லாததால் தண்ணீர் ஓடும் வாய்க்காலில் தூக்கி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என மக்கள் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நாடு சுதந்திரம் அடைந்தும் சுடுகாட்டிற்கு இன்னும் வழிகேட்டு போராடும் நிலைதான் உள்ளது என்றும், இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு சுடுகாட்டிற்கு சரியான வழியை அமைத்து தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களைக் கண்டித்து அரை நிர்வாண ஆர்ப்பாட்டம்!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Demonstration against Chidambaram Nataraja temple deities

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக சைவ வைணவ பாகுபாட்டால் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு பிரம்மோற்சவம் நடத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தற்போது கோவிந்தராஜ பெருமாள் கோவில் இந்து சமய அறநிலை துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது இதற்கு இந்து அறநிலையத்துறை மற்றும் கோவில் அறங்காவலர்கள் பிரம்மோற்சவம் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்த போது நடராஜர் கோவில் தீட்சிதர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிதம்பரம் காந்தி சிலை அருகே தெய்வீகபக்தர்கள் பேரவை சார்பில் பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவிக்கும் தீட்சிதர்களை கண்டித்தும் பிரம்மோற்சவம் நடத்த ஒத்துழைப்பு அளிக்க வலியுறுத்தி அரை நிர்வாண கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனர் ஜெமினி ராதா தலைமை தாங்கினார்.

இதில் காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் மக்கின், மாவட்ட நிர்வாகி ராஜா சம்பத்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகி வி எம் சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அரங்கத் தமிழ் ஒளி, தெய்வீக பக்தர்கள் பேரவை நிர்வாகிகள், அனைத்துக் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு நடராஜர் கோவில் தீட்சிதர்களைக் கண்டித்தும், பிரம்மோற்சவம் நடத்த அனைத்து ஏற்பாடுகளுக்கும் எந்தவித தடையும் விதிக்காமல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பினார்கள்.

Next Story

சிதம்பரம் அருகே சைவ சித்தாந்த 119ஆம் ஆண்டு மாநாடு!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Saiva Siddhanta 119th Annual Conference near Chidambaram

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பின்னத்தூர் பர்வதவர்த்தினி உடனாய ராமநாதேசுவரர் மற்றும் அருணகிரிநாதர்- பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் கோவிலில் சென்னை மயிலாப்பூர் சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் 119-ம் ஆண்டு விழா மாநாடு,  வெள்ளிக்கிழமை(21.6.2024) தொடங்கியது.

இதில் தமிழ்நாடு பவுண்டேசன் முதன்மைச் செயலாளர் இளங்கோ  கொடியேற்றி தொடங்கி வைத்தார். சத்தியமூர்த்தி கொடிக்கவி ஓதினார். மாலை 4 மணிக்கு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழ் மண் சார்ந்த சைவ சித்தாந்த பெருமன்ற தலைவரும், சென்னைப் பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறை தலைவரும், பேராசிரியருமான நல்லூர் சா.சரவணன் அனைவரையும் வரவேற்று பேசுகையில் 'தமிழ் மண் சார்ந்த சைவ சித்தாந்த பாடத்தை முதன்மை பாடமாக கொண்டுவர அனைவரும் முயற்சிக்க வேண்டும்' என்றார்.

அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் இராம.கதிரேசன் தலைமை தாங்கி சைவம் சித்தாந்தம் தொடர்பான 5 நூல்களை வெளியிட்டு பேசுகையில், “அறிவியல் சார்ந்த கருத்துக்கள் அதிகம் சைவ சித்தாந்தத்தில் பொதிந்து உள்ளது. குறிப்பாக அறிவியலில் முக்கியமாக கூறப்படும் 7 வகையான சக்திகள் சைவ சித்தாந்தத்தில் அடங்கியுள்ளது. சைவ சித்தாந்தம் மூலம் அறிவியல் தொழில் நுட்பமும் மேலும் முன்னேற வேண்டும். அத்துடன் சைவ சித்தாந்தம் தான் மக்களை மேம்படுத்தும் என்பதால் வெளியிடப்பட்ட நூல்கள் அனைத்தும் சமுதாயத்தை மேம்படுத்தும்” என்றார்.

தொடர்ந்து, பழனி ஆதீனம் குருமகா சந்நிதானம், சாது சண்முக அடிகளார் சின்னவேடம்பட்டி ராமானந்த குமரகுருபர அடிகளார்,  சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை உள்ளிட்டோர் பேசினர். மன்ற செயலாளர் கமல.சேகரன் , மன்ற செயற்குழு உறுப்பினர் தக்ஷிணாமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சிவனடியார்கள் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிவ பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர் தொடர்ந்து 2-வது நாள் மாநாடு இன்று நடைபெறுகிறது.