Skip to main content

மனைவிக்கு பிரசவம்  பார்த்த கணவன்!  தேனியில் பரபரப்பு!!

Published on 03/08/2018 | Edited on 27/08/2018
the

 

தேனி மாவட்டத்தில் உள்ள துணை முதல்வர் ஒபிஎஸ் தொகுதியில் இருக்கும் கோடாங்கிபட்டியில் உள்ள தென்றல் நகரில் வசித்துவருகிறார் கண்ணன்.  இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. இவருடைய மனைவி மகாலெட்சுமிக்கு தான் வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

     கர்ப்பிணியாக இருந்து வந்த  கண்ணனின் மனைவி மகாலட்சுமிக்கு நேற்று  இரவு திடீரென  இடுப்பு வலி ஏற்படவே  தனது மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார் கண்ணன்.  இந்த விஷயம்  அப்பகுதியில் உள்ள மக்கள் மூலமாக  ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு  தெரியவே பதறி போன நர்ஸ் கிராம நிர்வாக அலுவலர், போடி வட்டாட்சியர், இணை இயக்குனர் மாவட்ட பொது சுகாதாரம் உட்பட மொத்த மருத்துவக் குழுவுக்கும் தகவல் கொடுத்ததின் பேரில் மருத்துவ குழுவே கண்ணனின் வீட்டை முற்றுகையிட்டனர்.
 

இதுசம்பந்தமாக  சுகாதாரத்துறையை சேர்ந்த ஒரு அதிகாரியிடம் கேட்ட போது.... கண்ணன் தனது மனைவிக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார்.    இந்த தகவல் கிடைத்ததின் பேரில்  சம்ப இடத்திற்கு விரைந்து சென்றோம். ஆனால், தாய் மற்றும் சேயை பரிசோதிக்க  கண்ணன் மருத்துவ குழுவை அனுமதிக்கவில்லை. நேரம்  போக போக எங்களுடன் கண்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விரட்ட ஆரம்பித்தார். அதன் பின் வருவாய்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் இல்லை. குழந்தைக்கு தொப்புள் கொடி அறுக்காமல் இருப்பதை கண்டறிந்து, தொப்புள் கொடியை மட்டுமாவது அறுக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அப்போது கூட அலோபதி மருத்துவர்கள் வந்தால் நான் அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார். உடனே சித்த மருத்துவர்கள் குழுவை வைத்து குழந்தைக்கு தொப்புள் கொடி அறுத்தோம். அதற்கு மேல் எங்களால் எந்த பரிசோதனைகளையும் அவர் செய்ய விடவில்லை. இது என் வீடு, என் மனைவி, என் குழந்தை, நீங்கள் புறப்படுங்கள் என்று கடுமையாக சத்தம் போட்டார்  என்று  கூறினார்.


 அந்த காலத்தில் வீட்டில் பிரசவம் பார்ப்பது சாதாரண விசயமாக இருந்தது. பாட்டி மார்களின் பெரும் வேலையாகவே பிரசவம் பார்ப்பது இருந்தது. கூடவே, ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட்டுவந்தார்கள்.  அதனால் சுகப்பிரசவம் எளிதான ஒன்றாக இருந்தது. ஆனால், இப்போது இருக்கும் உணவுப் பழக்கவழக்கங்களுக்கு மருத்துவ கண்காணிப்பில் சுகப்பிரசவம் என்பதே சரியாக இருக்கும். இப்போது கூட தாய், சேய் இருவருக்குமான அடிப்படை பரிசோதனைகள் கூட செய்ய முடியாத சூழல் உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் தான் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தாய், சேய்க்கு அடிப்படை பரிசோதனைகள் செய்ய மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும்.
   

   வீட்டிலேயே மருத்துவ குழுவை பரிசோதிக்க அனுமதிக்கலாமே என்று கண்ணனிடம் கேட்ட போது,  நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் தானே.  என் மனைவியும் குழந்தையும் ஆரோக்கியமாக தானே இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது எதற்கு பரிசோதனை செய்ய வேண்டும்  என்று கூறினார். ஆனால்  இச்சம்பவம்  மாவட்டத்தில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுனால  மருத்துவ குழுவும் தொடர்ந்து கண்ணனிடம் பேசி தாயையும், சேயையும் பரிசோதனைக்கு அனுப்ப வலியுறுத்தி வருகிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.