Skip to main content

தாயை தேடி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குழந்தை - போலீசார் விசாரணை

Published on 21/10/2022 | Edited on 21/10/2022

 

Child who fell into water tank in search of mother-Police investigation

 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆவரம்பட்டி கம்பர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். மில்லில் வேலை பார்த்து வந்த மணிகண்டனுக்கு மாரீஸ்வரி என்ற மனைவி உள்ள நிலையில் இவர்களுக்கு முத்துலட்சுமி என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும் பசகேஸ்வரன் என்ற மகனும் இருந்தனர். பசகேஸ்வரன் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்தார். இன்று வழக்கம்போல் மணிகண்டன் வேலைக்கு சென்ற நிலையில் பசகேஸ்வரன் பள்ளிக்கு சென்று விட்டான்.

 

வீட்டில் குழந்தை முத்துலட்சுமி தூங்கிக் கொண்டிருந்த நிலையில் வெளியே மழை வருவதை உணர்ந்த தாய் மாரீஸ்வரி மாடியில் காய வைக்கப்பட்டு இருந்த துணியை எடுக்க சென்று விட்டார். அப்பொழுது விழித்த குழந்தை தாயைத் தேடியுள்ளது. அப்பொழுது எதிர்பாராத விதமாக வீட்டுக்குள் இருந்த தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளது. பின்னர் அங்கு வந்த தாய் குழந்தையை தேடிய நிலையில் குழந்தை கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து தண்ணீர் தொட்டியில் குழந்தை பேச்சுமூச்சு இன்றி கிடப்பதை கண்ட தாய் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்ற நிலையில், குழந்தை முத்துலட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்றரை வயது குழந்தை தண்ணீர்த் தொட்டியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.