Skip to main content

“பொதுமக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை முதல்வர் நிறைவேற்றியுள்ளார்” - அமைச்சர் சக்கரபாணி!

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

The Chief Minister has fulfilled the long-awaited expectations of the public

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தொகுதியில் இருக்கும் சின்னையகவுண்டன வலசில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை மானியக் கோரிக்கை 2021 - 2022 அறிவிப்பு எண் 5இன்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. அதை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். 

 

இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். புதிய கல்லுாரி வளாகத்தில், மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில், பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ. செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு பேசினார். அதில், “பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் ஏற்கனவே இரண்டு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் ஒரு தொழில்நுட்பக் கல்லுாரி பழனி நகரில் இயங்கிவருகின்றன. அங்கு மாணவ, மாணவிகள் சேர்க்கை அதிகளவில் இருப்பதால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கூடுதலாக கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்று  முதல்வரிடம் வலியுறுத்தினோம் . 

 

The Chief Minister has fulfilled the long-awaited expectations of the public

 

அதன்படி , இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு கல்லூாரியும், உயர்கல்வித்துறை சார்பில் ஆத்துார் சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு கல்லூரியும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பழனியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் சித்தா கல்லூரி தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற 6 மாதங்களில் சின்னையகவுண்டன் வலசில் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்கும் இந்தக் கல்லூரி, அடுத்தக் கல்வியாண்டு முதல் ஒட்டன்சத்திரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டடத்தில் செயல்படும். மேலும், தொப்பம்பட்டியில் உயர்கல்வித்துறை சார்பில் மேலும் ஒரு கல்லூரி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, ரெட்டியார்சத்திரம் மற்றும் வேடசந்தூர் ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவிகள் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திண்டுக்கல்லிற்கோ அல்லது 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பழனிக்கோ சென்று உயர்கல்வி பயில வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றி, ஒட்டன்சத்திரம் வட்டத்திலேயே கல்லுாரி அமைய ஆணைகள் வழங்கி, பொதுமக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை முதல்வர் நினைவாக்கியுள்ளார். திண்டுக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி விரைவில் தொடங்கப்படவுள்ளது. திண்டுக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டவுடன், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை பழனியில் அமைக்கப்படவுள்ளது.

 

The Chief Minister has fulfilled the long-awaited expectations of the public

 

தொப்பம்பட்டியில் அனைத்து வசதிகளுடன் அரசு மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. பரப்பலாறு அணை துார்வாரவும், விவசாய விளைபொருட்களை சேமிக்க குளிர்சாதன வசதியுடன் கிடங்கு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலம், தடுப்பணைகள் என விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகிறது. பழனியில் பச்சையாறு அணை கட்டப்படவுள்ளது. குதிரையாறு, பாலாறு - பொருந்தலாறு, வரதமாநதி, நல்ல தங்காள் - நங்காஞ்சியாறு, குடகனாறு, சந்தன வர்த்தினியாறு ஆகிய 6 ஆறுகளை இணைக்கும் வகையில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுவருகிறது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஒட்டன்சத்திரத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமை பயன்படுத்தி படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறலாம்” என்று கூறினார்.

 

இந்த விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் இணை ஆணையாளர் நடராஜன், கல்லூரி முதல்வர் வாசுகி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன்ராஜ், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் அய்யம்மாள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவர் சத்தியபுவனா உள்ளிட்ட அதிகாரிகள், கட்சிப் பொறுப்பாளர்கள் ஆகியோருடன் பொதுமக்களும் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.